Monday, October 3, 2016

தொலைதூரம்
என்றால்
எல்லாமே
தொலைந்து போன
தூரத்திலிருந்து தான்
என்றான அர்த்தமல்ல

கண்களுக்குள் வராத தூரம்
மழையோ
சுவரோ
வீதியோ
சாதியோ
எதுவாக வேண்டும் இருக்கலாம்
எனக்கு எல்லாமே தூரம் தான்
பல மைல்களுக்கு அப்பால்
ஆனாலென்ன
பல ஊர்களுக்கும் அப்பால்
ஆனால் தானென்ன
முத்தமிடுவதோ
காரித் துப்புவதோ
எதுவானாலும்
காற்றோடும் நிலத்தோடும் தான்
நகரும் வாழ்வு
அதிகாரம்
-----------------
காகமாகியவள்
சரிந்த தாழ்வார உச்சியில்
இருந்து
பறந்து போகிறாள்

வெய்யிலுக்கும்
நிழலுக்குமாக
சிஸ்டர்
சிஸ்டர்
அழைக்கும் குரல்களுக்கு
ஓடோடி வருபவள்
இரத்தக் கரைகளை
நாலு இழுப்பில்
பஞ்சாக்கி எறிபவள்
கைகளில்
சாவுகளுக்கான
ஊசிகள்
இல்லை
மகாவின் ஊஞ்சல்
----------------------

மாகா
கவிஞன்
அவ்வப்பொழுது
கீரீடத்தைக் கழட்டி
முடி அரிப்பை தேய்த்துக் கொள்கிறார்

கிரீடம் என்பது
அரசவைக்கு செறுக்கு
நம்ம
மகாவுக்கு
தெரியாததாயென்ன
மகா
கவிஞன்
இறங்கவே இறங்காத
அரச ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறார்
ஊஞ்சலில் ஆடியபடிதான்
காதல் கடிதமே எழுதுவார்
பாருங்களேன்
பதினைந்து வருடங்களுக்கு முன்னால்
மூன்று
நான்கு
ரோசாப் பூக்களை
முத்தமிட்டு வீசி அளித்ததில்
புதினைந்து வருடங்களாகவும்
பொக்கிசத்தைப் போல
பாதுகாத்து
வருகிறேன்
இது
அதிசயம்
அதிசயத்திலும் அதிசயம்
யாருக்கும் கிடைக்காத
பாக்கியம் அல்லவா
விழாநாட்களில்
வருடத்திற்கு
ஒரு முறை
அரசவைக்கு
காதலர்
மகா
கவி
தெய்வத்தைப் பார்ப்பது
வழக்கம்
நெடிய
வரிசையில்
கண்ணில் பார்ப்பதே
இப்பிறவிக்கு
போதுமானதாக
இருக்கிறது
மகா உதிர்க்கும்
ஒரு
வார்த்தை போதும்
அப்படியா
நல்லாருக்கியா
என
ஸ்ஸகானா ராகத்தில்
பாடும்
மகாவை
எத்தனை பிறவியிலும்
காதலிக்கலாம்
அதுவும்
மகா
கொடுத்த ரோசாபூவை
இன்னும்
கண்ணுக்குள் வைத்து
பாதுகாக்கிறேன்
இன்னும்
ஆண்டுக்கு ஆண்டு
சபரிமலைக்கு
இருமுடிகட்டிப் போவதுபோல
நாங்கள்
கூட்டமாக
எங்கள்
மகாவை
கவிஞனைப் பார்க்க
சென்றுகொண்டுதான்
இருக்கிறோம்
இன்னும்
இரண்டு நூறு நாட்களில்
அரசவைத் திருவிழா
விரதமிருகிறேன்
இந்த முறை
எப்படியும்
இன்னுமொரு
ரோசாப்
பூ வை
முத்தமிட்டு
தந்துவிடுவார்
எங்கள்
குல தெய்வமே
மகா
கவி தான்
எங்கள் வீட்டில் பூனையென்றால் ஸ்விஸ்



ஸ்விஸ் ஸ்விஸ்
ஸ்விஸ் ஸ்விஸ்
என்று அழைக்கும் பூனை
விட்டிற்குள் நுழைந்ததும்
வாகனச் சக்கரத்தை
உரசுகிறது
பின்பு
கால்களை உரசுகிறது
கூடவே மியாக்களை
உதிர்த்து உதிர்த்து
நீவிவிடவும்
கொஞ்ச வைக்கவுமான
பூனையின் அன்பு
நெகிழ்சியானது
சில்வர் தட்டுக்கு பக்கத்தில்
பாயின் மேல்
போர்வையின் மேல்
சுருண்டு படுக்கும் பூனையை
ஸ்விஸ் ஸ்விஸ் என்று
அம்மா அழைப்பாள்
ஸ்விஸ் ஸ்விஸ் என்று
பிரகாசினி அழைப்பாள்
ஸ்விஸ் ஸ்விஸ் என்று
தரணியும் அழைப்பான்
அவ்வப்பொழுது
ஸ்விஸ் ஸ்விஸ் என்று நானும்
அழைப்பேன்
பூவாக
இல்லாத
பூ
பூ
போலல்லவா
பூக்கிறது

பூவுக்கென
பூ வேசம்
எதற்கு தாயி
பூவே
வாழ்வினத்தின்
கபடமற்ற
ஜீவனன்றோ
வான் பூவின் வசந்தன்



வானத்தில் மலர்ந்த
ஒற்றைப் பூ
பறக்கும்
இந்த சொற்களைத்தானே
கூடுகிறது
கீழாக
துளிப் புள்ளி
மானுட வண்ணத்தில்
காணும்
தொலைவில்
நீ
ரசிகனானாய்
பாவம்
ஏதோ ஒப்பேறுகிறது
தரிசனம்
வான் பூவின்
வசந்தன்
பூ
பூவாய் திரிகிறான்
வான் வெளியில்
வரிக்கோடுகள்
அழகுக்கானவையல்ல
அளந்து
பசித்த புலியாகி
இரவுலிருந்து
பகலுக்கும்
வீட்டிலிருந்து
வீதிக்குமாக
இணைக்கும் ஓவியத்தில்
கலைஞன்
கவிதையாகும் தருணம்
இவைதான் அன்றோ
ஆகச் சிறந்த அழைப்பாயென்ன
உப்பு சப்பில்லாத ருசியாக வெறுமனே
சங்கடத்திற்கென
எட்டிப்பார்க்க
சின்ன வெள்ளாட்டுக் குட்டிகூட
மேயாது கிடக்கும்
செங்காட்டு புதர்களில்
மேலோட்டமாக திரிந்து நகரும்
வெய்யிலுக்குப் பின்னான
நகர்வலமானதே இந்நிழல்
என்னை வரச் சொன்னாய் வந்தேன்
ஏனென்று
நீயும்
சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை
பந்தய சலையில்
முந்திக்கொண்டு போன வெள்ளைக் குதிரை
இந்த பின் சட்டைக்காலரை
வாலில் சுருட்டி இழுத்தபோது குதிரை வீரன்
எனது இரு சக்கர வாகனத்திற்கு வந்திருந்தான்.
சிறிது நேரம் அந்தரத்தில் பதறிக்கத்திய படி
வாகனத்திற்கும் குதிரைக்குமிடையே
அலைந்து கொண்டிருந்த கவிதை கை கொட்டி
கை கொட்டி
சிரித்துக் கொண்டிருந்தது நானுக்கும் சொற்களுக்கும் அல்லாடி விழித்தபோது
குதிரையின் முதுகில்
அமர்ந்திருந்தேன்.
அழைக்கும் குரல்களுக்கு குதிரைக்காரன் ஆகிப்போன பொழுது
குதிரை கனைத்து நின்று நேரம்
தடுமாறி விழுந்த இடம்
எனது இரு சக்கர வாகனம்
குதிரைக்காரன்
வெள்ளைக் குதிரையை
ஓட்டிக் கொண்டிருந்தான்
அவரவர் வழி
அவரவர் இடத்திற்கு
அவரவர் பயணிக்க
எததனை எத்தனை மாற்றங்கள்
குருட்டு
உலகத்தில்
தென்றல்
ஒரே ஒரு
முடியை
மட்டுமே
அசைக்கிறது
இதனால் தானோ
விரல்களும்
ஆடுகிறது
கால்களுக்கு முத்தமிட்டு
வரம்புகளற்ற பாதையன்றோ
கை நீட்டி
அழைத்து செல்கிறது
கவிதை


அடர்ந்த அபூர்வ வாசனையை நுகர்தல்
சாத்தியமாகிறது
தொலைவாக நீர்போல வளைந்து நெருங்கி சற்றுமுன்
வசம் வந்து சேர்ந்துள்ளது
ஆயிரமாயிரம் கனவுகளை
உள்ளடக்கிய
அடைதலில்
எந்த ரசானுபவத்தை
தரப்போகிறது
எவ்வாறாயினும்
சாமியாடி போலவும்
கோழிகளின் குருதியை
அப்படியே
பசியன்புமாறாமல் ருசிப்பதில்
சிக்கல்களேயிருக்காது
என்றே துடிக்கிறது
முனைப்பு
தெரியாமல் செய்வதில்லை



யோக்கியமில்லாமல்
காரியத்தை ஆற்ற வேண்டுமெனில்
யாருக்கும் தெரியாமல்
இருக்க வேண்டும்

அது முடியாது
உள்ளங்கைகளில்
அரிக்கிறது
பணிக்கும் தொழிலின் கூரைகளுக்குள்
ஓராயிரம் கண்கள்
கனவு இதழி இடுப்பிலிருந்து
சுருக்குப் பை உருவ
ஆயிரம் புனைசொற்கள்
தூவி மண்டபங்களை
செய்யலாம்
வாங்கித் திங்க லட்சம் திசைகள்
அழைக்கலாம்
சவ்ந்தர்ய வரிகளை
கவிதைகளுக்குள்
பட்டவர்த்தனமாக
ஒட்டகங்கள்
ஓடுவது கண்களுக்குள்
தெரிகிறது
கண்களுக்குத் தான்
சொல்கிறேன்
ஒட்டகங்களின் தாகம் தானே
கவிதை
அதனால் தெரியாமல்
செய்வதற்கு
ஏதேனும் உண்டா
கண்களே
ஒளி சூழும் உலகிலும்
நிழல்கள் வாழ்கின்றது
அழியவே அழியாத
முகங்களை
எதற்குள் திணிக்கப் போகிறீர்கள்
பின் வாசல் அல்ல
அவசரம்
வேண்டாம்
மறந்தும்
முன் பக்கம்
வந்து விடப் போகிறீர்கள்
மறைக்க முற்படும்
சப்தங்கள்
அடங்கிவிடவா போகிறது
யாருக்கும்
தெரியவேண்டாம்
என்று

சாத்த சிரமமான
கதவை
ஏன்
சாத்த முயல்கிறார்கள்
நாடகம்




சிலருக்கு
நாடகங்கள்
அரங்கேற்றம் ஆகிவிட்டது

சிலருக்கு ஆகிறது
சிலருக்கு
தயார்
ஆகிக்கொண்டேயிருக்கிறது
எங்கெல்லாமோ சுழழும்
பலரது
வார்த்தைகளுக்குள்
ஓடும்
ஈரத்தின் நதி
இங்கே
பிஞ்சு பாதங்களை
நனைத்தல்லவா
ஓடுகிறது
பேருண்மை




தற்பொழுது தான் இளவெய்யில்
படர ஆயத்தம் கொள்கிறது
யாருடைய பற்றுதலுக்காகவோ
தெருமுனையில் காத்திருக்கும்
கீரையிலைகள்
பருவ தளதளப்புடன்
ஜொலிக்கிறது
சின்னஞ்சிறு குழந்தையின் கையிலிருந்து
தவறிவிழும் மிட்டாயைப்போல
விழுந்து படரும் காலை
பேருண்மையாக
குப்பைகளின் மீதும்
உன்னதங்களின் மீதும்
பொழிந்து செல்கிறது

Saturday, July 16, 2016

செல்லக் கிளிகள்


குறை கூறும்
கிடங்குக்குள் இ்ருந்து
தவித்தபடியிருக்கும்
நிலைமை
எதுவும்.கற்றுத்தறாதா
செல்லக் கிளிகள்
ஏன்
திரும்பத் திரும்ப
ஒன்றை
ஒரே சாயலில்
சொல்லுகிறது

பகல்கள்


உள்ளங்கைக்குள்
அடங்கிய உன் பகலை
ஆரஞ்சு பழத்தொப்பையென
உரிக்கும்பொழுது
தடுமாற்றங்களும்
சிற்சில பொய்களும்
மறைக்கப்பட்ட அறை
ரகசியங்களும்
விரல்கள் நனைக்கும்
ஈரமென
கசிந்து நிரம்புகிறது
அறிந்தும் அறியாததைப் போல
இன்றைய நம் பகலின்
சிறு துண்டைப் பிய்த்து
ருசித்துக்கொள்கிறோம்
அவரவர்களின் பகல்கள்
மற்றவர்கள் கைகளில்
அருஞ்சுவை

வெட்டி வேலை செய்பவன்


அவனிடம்
யாரும்
குழம்பிக் கொள்ள தேவையில்லை
அவனிடம்
யாரும
நம்பிக்கை கொள்ள தேவையில்லை

அவனிடம்
யாரும்
நேரத்தை வீணாக்கி விட தேவையில்லை
இந்த உலகத்தில்
ஒருவன்
வெட்டிவேலை செய்கிறான் என்றால்
அன்பைப் பற்றி
காதலைப்பற்றி
கடவுளைப்பற்றி
சதா
பினாத்திக் கொண்டே யிருப்பவனாகத்தான்
இருப்பான்
அவனிடம்
யாரும்
தங்களின் பொன்னான நேரத்தை
செலவிட வேண்டிய அவசியமில்லை
அந்த நேரம்
தங்களின் செல்ல நாய்க்கு உணியெடுத்து
நெருப்பில் வீசிக்கொண்டிருக்கலாம்
கச்சிதமான உடையமைப்புளுக்கான
தேர்ந்த தையல்காரரொருவரை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம
விருப்பத்திற்குரிய
நெகச் சாயத்தை ஆன் லைனில்
வாங்க முற்படலாம்
ரகசியம் சார்ந்த உற்வுமுறைகளுக்கேற்ப
வீரியத்திற்க்கான மூலிகைகளை
நெருங்கிய நண்பர்களிடம்
ஆலோசணை கேட்க ஆவலாகலாம்
ஆகவே
தங்களின் பொன்னான நேரத்தை
விரயமாக்கிவிட தேவையேயில்லை
அப்படிப்பட்ட ஒருவனுக்காக
யாரும்
வருத்தப்படவும் தேவையேயில்லை
நாட்கள் வீணாக
வரவே வராத.வருகைக்காக
இறங்கவே இறங்காத
பறவைகளுக்காக
எதற்காக
சொற்களை இறைத்துக் கொண்டிருக்கிறாய்

கை சூப்பி


புரிந்து கொள்வதற்கும்
புரியாமலிருப்பதற்குமான
பெயர் குழப்பங்கள்
பெரும்
சிரமத்திற்குள்ளாக்குபவை

கவிஞனொருவன்
அழுதான்
என்று
சொன்னார்கள்
புரியவில்லை
விமர்சகன்
அழுதான்
என்று
சொன்னார்கள்
புரியவில்லை
புரட்சியாளன்
அழுதான்
என்று
சொன்னார்கள்
புரியவில்லை
கைசூப்பி அழுதான்
என்று
சொல்லியிருந்தால்
இத்தனை மெனக்கெடல்கள்
தேவைப்பட்டிருக்குமா
கனவே

தழும்புகள்


இன்னும் தழும்புகள்
மறையவில்லை
அன்பை
பிரியத்தை
காதலை
முத்தங்களை
இன்னும் பிற
சொச்சங்களை
மூக்குக் கண்ணாடியைப் போல
இறக்கி வைக்கிறேன்
மேலும்
கொஞ்சம்
இடைவெளிக்காக
கண்ணீருக்காக
துயரத்திற்காக
மறைப்பதைப்போலான
நிர்பந்தங்களுக்காக

டா டா


கையசைக்கிறேன்
இரவே
அதற்குள்
ஓட்டத்தை
துவங்கிவிட்டாய்
எனை இழுத்து வந்து
தூர
எறிந்துவிட்டு
திரும்பிக் கொண்டிருக்கிறாய்
பகலின் அரக்க சப்தங்களுக்கு
இரையாக்கும் படி
யார்.உத்தரவிட்டது
ஆயினும்
வாழ்த்துக்கள்
போய்
வா
இரவே
டா டா

மீனின் பாடல்


செதில்களில் உலரா
காயங்களில்
நீந்திக் கொண்டிருக்கும்
மீனின் பாடலில்
ஈரம் அசைகிறது

இருள் நதியில்
கரையும்
ஆயுளின்.நிறங்கள்
வெளுக்கும்
நேரத்திலல்லவா
வுன்
காதலை
பரிசளிக்கிறாய்

விளையாட்டு


தெற்கு
வசந்தத்தை
அழைப்பதைப் போல
அழைத்துக் கொண்டிருப்பது

இங்கிருந்து
தெரிகிறது
விளையாட்டு
தாமதமாகவே
நடக்குமென
நம்புவோமாக

மயிர்


மயிர்
என்பதன்
பொருள்
வெறும்
இழி
சொல்லாகவோ
நிராகரிப்பின்
அடையாளச் சின்னமாகவோ
கருதுவதில்
உடன்பாடில்லை
அது
சொல்லின்
இடத்திலிருந்து
பெறும்
குரலைப் பொறுத்தது
அதன்
வாழ்வைப் பொறுத்தது
இதயத்தின்
ஆழத்தைப் பொறுத்தது
வகைமையைப் பொறுத்தது
என்னைப் பொறுத்தவரை
பொன்னுக்கும்
புகழுக்குமான
உயரத்தை
விட
வலிமை மிக்கதாகவே
புலப்படுகிறது
சுவைக்க
விருப்பமிருப்பின்
இருக்கையை
கடந்தும்
முயற்சிக்கலாம்
தடையும்
கூச்சமும்
மனதைப் பொறுத்ததே
சுவைக்க
விருப்பமிருப்பின்
இருக்கையை
கடந்தும்
முயற்சிக்கலாம்
தடையும்
கூச்சமும்
மனதைப் பொறுத்ததே

சிறு ஒளி


சாய்ந்து மறைக்கும்
வாழ்வினிிடையே
இச்
சிறு
ஒளி
நகர்த்திவிடுகிறது
இன்னொரு
எல்லைக்குள்
.
அவரவர்க்கு
ஒவ்வொரு
எல்லை
அது
முடிவிற்கும்
முடிவின்மைக்குமாகப்
புலப்படும்
ஒரு
பூ
அல்லது
அசையும்
சுடர்
விழுந்து
விழுந்து
உச்சி மதிலை
அடைந்த
சேவலின்
முன்

இறையாகி
விட
சம்மதமே
நெளிந்த
புழுவாகவேணும்

முத்தமிடுகிறேன்


பிளந்து
உரிந்த
உதடுகளின் வழி
காமத்தை
ஒளித்திருக்கிறேன்
மனிதனாக
நடிக்க வரவில்லை
ஓடு
அதற்குள்
எல்லாவற்றையும்
அள்ளியெடுத்து
இடுக்கிக் கொள்
முத்தமிடுகிறேன்
உனது
கனிவின் மீது
முத்தமிடுகிறேன்
உனது
ஏமாற்றத்தின் மீது
முத்தமிடுகிரறேன்
உனது
பரிதவிப்பின் மீது
முத்தமிடுகிறேன்
உனது
கண்ணீரின் மீது
முத்தமிடுக்கிறேன்
உனது
தோல்வியின் மீது

பயணம்


கைப்பற்றிவிடும்
காதலல்ல
நீ
அடைவதற்கு

இன்னுமொரு
மலையை
தன்னந்தனியாக
நெருங்கியாக
வேண்டும்
சிறு
குருவியையாவது
துரத்த முற்பட வேண்டும்
பயணம்
என்பது
அவ்வளவு
எளிதா

வா


வா
மனமுவந்து
என்னோடு
வா
சிறு
புல்
அசைய
நுனியில்
மிதந்தோடும்
ஆட்டம்
வா
தவளையாக
மாறலாம்
ஒவ்வொரு
உயிரிலும்
ஒவ்வொரு
உலகம்
காண்
வா
தூற
வா

வா


வரவேற்ப்புகளுக்கான
அத்தனை உபகரணங்களையும்
தயார் செய்திருக்கிறேன்
உனது படை சூழ
எனது படுக்கையறைக்குள்
நுழையலாம்
எல்லா வடிவத்திலும்
ஆட்கொள்ளலாம்
மரணத்தின்
கடைசி ருசியும்
தேக்கத்திலிருந்து
கரைந்து விட்டது
உதிர்ந்த இலைகளனைத்தும்
உயிர் பெறுமென் கிறாய்
கன்னத்தில் குழி விழுக
வா
எல்லா
ரூபத்திலும்
புன்னகையோடு காத்திருக்கிறேன்
ஒரு
பைத்தியத்தைப் போலவோ
அல்லது
கடவுளைப் போலவோ

ஊமைத் துயரங்கள்


விரித்த வண்டுகளின்
இறகுத்தூசிகள்
பட படக்க அசைகின்றது
சிக்கிய உயரத்திற்குள்ளிருந்து
எழும்பும் ஊமைத் துயரங்கள்
வாழ்வை உரசுகிறது
மொழித்தேர்செல்ல
வன்முறைகள்
நிசப்தத்திற்குள்
நிகழ்கின்றது
இறுதியாகிவிட்டது
இருள் மரம்
அழைக்கிறது
இனி
எப்பொழுதும்
திரும்பாத சைகையின்
பெரும் அழைப்பு
அது
பசித்த நிசியின்
குகை
மிகப் பெரும்
கருவறை
பதற்றத்தில் அனிலென
விழும்
சொற்களின்
உடலெங்கும்
வலிகளின் அகலங்கள்
இயன்றவரை அசைக்க
தரைதொட்ட பழங்களில்
சுவைப்பது
சுட்ட பழமா
சுடாத பழமா

வருந்தாதே செல்லமே


நாளைக்கான
உடைகளை
தயார் செய்வதைப்போல
நாளைக்கான
நட்புகளை
தயார்செய்யவேண்டியிருக்கிறது
நாளைக்கான
நிறங்களை
தேர்வு செய்வதைப் போல
நாளைக்கான
கொண்டாட்டங்களை
தயார் செய்ய வேண்டியிருக்கிறது
நாளைக்கான
விருதுகளை
தேர்வு செய்வதைப் போல
நாளைக்கான
நடிப்புகளை
தாயார் செய்ய வேண்டியிருக்கிறது
நாளைக்கான
புகழ்களை
தேர்வு செய்வதைப் போல
நாளைக்கான
சண்டைகளை
தாயார் செய்ய வேண்டியிருக்கிறது
நாளைக்கான
மரணத்தை தேர்வு செய்வதைப்போல
நாளைக்கான
காலத்தை
உருவாக்க வேண்டியிருக்கிறது
எல்லா ஏற்பாடுகளும்
நினைத்தபடி
நடந்து கொண்டிருக்க
வருந்தாதே
என் செல்லமே
நீ
நீடூழி வாழ்வாய்
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
கனிவைத் தருபவை
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
இறக்கத்தைத் தருபவை
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
மென்மையானவை
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
சோகத்தைத் தருபவை
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
நறுக்கப்படுபவை

அரிதாரங்கள்


பசிக்கு மட்டுமே
மேயும்
கோழி
கிழக்கு
மேற்கு
பார்ப்பதில்லை
கவிதைக்கு
மட்டுமென்ன
கணக்கு
அரிதாரங்களை
பூசுவதற்கு தானே
ஆட்களைத் தேட வேண்டும்
அய்யய்யோ
கோவிச்சுக்க வேண்டாம்
தொடரட்டுமையா
தங்களின்
கோசம்
அலைக்கலிக்கும்
சொற்களுக்குள்
தடுமாறுகிறதென்
மீன்

நகர்வலம்


கையுறைக்குள் உலவும் கரங்கள்
கடவுளின் கரங்களேயில்லை
கையுறைக்குள் உலவும் கரங்கள் கருணைகளின் கரங்களேயில்லை
கையுறைகளின் மறைவுகளுக்கிடையில்
சூத்திரங்களின் கண்கள் விழித்துக்கொண்டேயிருக்கிறது
கையுறைகளுடன் காத்திருக்கும் ஏதாவதொரு கைகள்
மூன்று சக்கர வண்டியை தள்ளிக்கொண்டேயிருக்கிறது
மூன்று சக்கர வண்டியில் பொருத்தப் பட்டிருக்கும்
இசைக் குரல்கள்
வழக்கம் போல
கண்ணீர் வரிகளை சொட்டிக் கொண்டேயிருக்கிறது
மேலும்
வழக்கம் போல
விரக்திகளின் சுருதிகளை கலைந்துவிடாமல்
கண்காணித்துக் கொள்கிறது
யாராவது ஒருவரின் கெஞ்சலுக்குமிடையில்
யாராவதொரு வரின்
புகழ்களுக்கிடையில்
யாராவது ஒருவரின்
சுகங்களுக்கிடையில்
ஏதாவது ஒரு
கையுறையுடனான கரங்களின்
உந்துதலுடன்
மூன்று சக்கர வண்டி நகர்ந்து கொண்டேயிருக்கிறது

அலைந்து கொண்டிருக்கும் கடவுள



 ்அட பைத்தியகாரா
இரவுக்குள் ஒரு வார்த்தை
பகலுக்குள் ம்று வார்த்தை
என்று மாறத்தெரியாத மடையா

இந்த வியாபார உலகத்தில்
கவித கழுதன்னு கண்டதெயெல்லாம் பெனாத்தீட்டுகெடக்கெறயே
வெளங்கா
நாய்களா.
த்தூ ,.
கண்ணாடிக்காரர் தோட்டத்து பக்கத்தில்
காரித்துப்பிச்சென்ற
கிழட்டுக் கடவுளிடம்
கண்ணீர் வழிய கேட்டேன்
எப்பொழுது
எங்களுக்கு பிழைக்க வழிகிடைக்கும்
இனி வாய்ப்புகளேயில்லை
என்னையும் சேர்த்துத்தான்
சொல்லிச் செல்கிறேன்
அதனாலதான்
கடவுளாக அலைந்தபடியிருக்கிறேன்
என்றார் கடவுள்

காதல் மணக்கும் கவிதைகள்


சீக்கிரம்
வேண்டுமென்றாய்
ம்
மனதின்
ஆழத்தில்
இறங்குவதற்கு
படிக்கட்டுகளின்
எண்ணிக்கையை
தவறாகவும் கூட
குறித்துக்கொள்வதறிது
இன்னும்
கூட
வாழ்ந்து பார்க்க வேண்டும்
காலம்
முக்கியம்
மரணத்தைப் போல
வாழ்வும்
அத்தனை
அவசியம்

காதல் மணக்கும் கவிதைகள்


விரல்களுக்குள்
ஆயிரமாயிரம்
உணர்வுகள்
.
அது
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு
பூவை
உயிர்த்துக் கொள்கிறது

ஒவ்வொரு
பூ விற்கு
ஒவ்வொரு
குணம்
ஒவ்வொரு தீண்டலுக்கும்
ஒவ்வொரு வானம்
அவதாரம்
என்பது
கவிக்கு
சாத்யமே
கடவுளே

காதல் மணக்கும் கவிதைகள்


வெறும் வார்த்தைகள்
எப்படி
சபையேறும்
ஆடை உரசும் நெருக்கத்தில்
மனம் அந்தரத்தில்
ஊசலாடுகிறது
இத் தருணத்திற்குத்தான்
எத்தனை
எத்தனை
உளறல் மொழிகள்
இறகுகள் சூடிக்கொள்கிறது
புரிந்து கொள்ள முடிகிறது
காற்றுக்குள் மட்டுமே
கரைந்து போவதில்
அவ்வளவு சுகம்

காதல் மணக்கும் கவிதைகள்


கலைஞன்
பட
நாயகன்
ஆடிக்கொண்டுதானிருப்பான்

காலம் முழுதும்
இப்படி
ஜால்ரா போட்டே
வகை வகையாய்
ஓட்டியாச்சே
குமாரா.......
இன்னம்
எத்தினி நாளுக்கு
இந்த
பழைய
டமாரமெல்லாம்
படிச்சதீவே
படி
புடிச்சதீவே
புடி
யாருக்கென்ன
பிரியத்தில்
முத்தமிட்டு
கலைஞனின்
காதலி
ஆடிக்கொண்டேதானிருப்பாள்

காதல் மணக்கும் கவிதைகள்


வயதென்னும்
பொருட்டில்லை காதலில்
உன்வயதைக் கொண்டு
என் காதலையல்லவா
பரிசீலித்தாய்
நீ
பார்க்க
ஆறாய் ஓடுகிறேன்
நரை வயதை வைத்துக்கொண்டு
இத் தடத்திடல்
........................
என்செய்வாய்
நிறத்தோனே
தோல்வியென்று
எதுவுமில்லை
இளமைக்குத் தெரியும்
ஒரு வேளை
என் பிரியத்தில்
தடுமாற்றமிருந்திருந்தால்
கூட்டத்தோடு அலலவா
கொன்றிருப்பாய்
எக்காளமிடும்
வயதிற்கும் புகழுக்கும்
சம்பந்தமில்லாத
காதலை
உள்ளங்கையில் வைத்தல்லவா
விளையாட்டாக்கினாய்
அன்பே
வெற்றி எனபது
காதலில்
ஆயினும்
வெறுப்பில்லை
உன் நடத்தையில்
வயதும்
கூட அழகு தான்
தரைக்கு வந்துவிட்டேன்
நிறத்தோனே
தாராளமாக
பூக்களோடு வரலாம்
இத் தடத்தில்

காதல் மணக்கும் கவிதைகள்


ஏற்பாடுகளாகிவிட்டதா
குறிப்பிட்டபடி
திட்டங்கள்
நடைபெறுகிறதா
எல்லாம்
நினைத்தபடி
நடந்து கொண்டிருப்பதானால்
காதலென்கிற வார்த்தையால்
கொலையாட்டங்கள்
நிறைவடையட்டும்

காதல் மணக்கும் கவிதைகள்


காதல்களுக்கல்ல
அழகுகள்
அது
வெத்துப் பொல்லைகள்
ஈர்ப்புகள்
அற்ப காட்சிகளுக்கு மட்டுமே
காதல் குறிகளற்றது

காதல் மணக்கும் கவிதைகள்


அலைப்புகள் புதைந்திருக்குமிடம்
மவ்னத்தின் உள்.அறை
அல்லது
பகட்டுகளின் நிழலிடம்
ஓராயிரம்
சொற்களுக்கிடையில்
பவனி வரும்
ரகசியங்களின்
நுனிப்பிடி
திசையேதோவொன்றில்

காதல் மணக்கும் கவிதைகள்





அடையாளங்கள்
புழுத்துப் போகட்டும்
பறந்து செல்லும் வழி
காதலாகா அந்தரத்தில்
இறுக்கிக்கொள்ளும்
அறைகளுக்குள்
கணக்குகளின் ஆட்சி
நாட்காட்டியின் சதுரங்களில்
உரசும் உடல்கள்
பேராசைகளை கக்குகிறது
காமத்தின் புழுக்கைகள்
அகற்றப்பட்ட கணத்திற்குள்ளிருந்து
புனிதையர்களின்
வருகைகள்
பதிவாகி உயிர்க்கிறது
மாதிரிகள் அமோகமாகி
வழியும் நாட்களுக்குள்
நீயும் நானுமாகி
அவளும் அவனுமாகி
நுழையத் துவங்குகிறோம்
இரவுகள்
எப்பொழுதும் போல்
இறுதிக் கட்டத்தை
முடித்துக்கொள்ளப் போகிறது
கவிதை



விலாசத்தைக் கண்டடைய
வனாந்தரத்தில்,
சாலையில்
இருளில்
பகலில்
நாட்களில்
நொடிகளில்
திசைகளில்
கணக்கிற்குள் வராத
இணடு இடுக்ககளில்
காலங்களில்
நிறத்தில்
ஆயுதத்தில்
ஆணில்
பெண்ணில்
திரு நங்கையில்
குழந்தையில்
காப்பியங்களில்
இதிகாசங்களில்
வியர்வையில்
நீர்
நிலம்
ஆகாயம்
நெருப்பு
புகை
பூ
இன்னபிற அனைத்திலும்
கண்டடையலாம்
துாரத்து நிகழ்வு



பாரம் தாங்காத நிலத்தில்
இருப்பும், தீனியும் தடைபடுதா
அங்காலாய்ப்புகளுக்குள்
உட்கார்ந்து
ஆசையைக்கு மட்டுமே
வார்த்துக்கொள்ளும்
புகழின் குழந்தைக்கு
பசிக்காது நிரப்பிக் கொண்டிரு
தத்துவங்கள்
செரிமாணத்துக்கல்ல
மணடியிட்டு
நிரப்பிக் கொள்ளும்
இடத்திற்கு அல்ல கவிதை
அவ்வுயிர்
நிஜ ஊற்றின் ஆதாரங்கள்
இம் மலையிலிருந்தே
வழிகிறது
வுன் கண்கள்
மலைக்குவொரு
செடி கொடி போல துாரத்து நிகழ்வு
நிலத்தின் ஈரத்தில் படியும்
நிழல்களில்
யாமாகவே நிறைகிறது கவிதை

Friday, June 24, 2016

ஆழம்


துளியின்
நுனியிலிருந்து எழும்பும் பாடல்
ஆழத்திலிருந்து எழுகிறது
இசையின் வயதைக் கணக்கிட
பல ஆயுள்கள் தேவை
வயது
கூடுகளாகி காய்ந்துகிடக்கும்
வெட்டிச் சருகு
ஓடும் பகல்களுக்குள் ஒளிந்து கொள்ளுதல்
சாலச்சிறந்ததின் அமசம்
அதுவே அழைத்தும் செல்லும்

அலாதி


சைவம் மாமிசங்களை அருந்தாது
போதும்
கிளிகள் பழங்களை கொத்துகின்றன
மலைக்குன்றின் இடைவெளியில் நுழையும்
காற்றுக்கென்ன அது அதன்வழி தேடுகிறது
முடியாக் கூகைகளுக்கு பெரிதெதற்கு வெறும் கண் போங்கடா
முயலின் வெண்மை ஓட்டம் வேகம் மட்டுமா
அழகே அதனிலும் அலாதி
கைவசமிருக்கும்
ஊசிகளில்
தேவையானவற்றை
நிரப்பியாகிவிட்டது
யாரைக் கொன்றது
யாரைக்கொல்வது
யாரை மயக்குவது
யாரை வீழ்த்துவது
பின்வரும்
அட்டவனைகள்
சாதாரணமாக
தட்டுப்படுவதில்லை

ஈரம்


தேசம் முழுதும் திரிந்தாலும்
இங்கு தான்
இறங்கியாக வேண்டும்
பறவைகள்

Wednesday, February 24, 2016

மென்மையை நெஞ்சோடு ஒத்திக் கொள்பவர்
எவன்
நாண்டுகிட்டாலென்ன
அந்த பட்டாம் பூச்சி
ஒயர்க் கோடு போட்டுக் கொண்டு
சிறு
படக்
சிறு
படக்
சின்னஞ் சிறு
படக்
என
பறந்து
போவதாக
ஹா..ஹ
ஹா..ஹ..வென
குரலெலுப்பி
மென்மையால் ஊது
யார் வேண்டாம் என்கிறார்கள்
எவள்
துாக்கில்
தொங்கினாலென்ன
வெகு சுத்தமாக
கலைக்கான
நளின வனப்பை
நெஞ்சோடு ஒத்தி கண்களை
முடிக் கொள்
கருமம் புடுச்சவனெ
காலம்
இன்னும் ஏண்டா
உங்களெல்லாம் விட்டுவச்சிருக்கு
எளிய சொல்



மிக
எளிய
சொல்
கேட்டாய்

மிக
மிக
எளிய
சொல்
தந்தேன்
ம்..
கூ....ம்
என்றாய்
கொஞ்சம்
யோசித்து
மிக
மிக
மிக
எளிய
சொல்லை
சொல்ல
விரல்
அசைத்தேன்
சூழலை
விட்டு
தப்புவித்தாய்
வெட்கங்கள்
சிதற
திரும்பி
ஒடுகிறது
அலைகள்
முடிவாகிவிட்டது
தலைகீழாய் விழும் நட்சத்திரங்கள் கனலடங்காஆழத்தில் திடுக்கென மரிக்கிறது
அபத்தங்களுக்கு
பலியாகும் நேரத்தில்
முதுமைக்குழந்தை நீ
புன்னகை மாறா
அம்சங்களுடன் கை அசைப்பாய்
அந்த பரிதாப நிலைக்கு சற்று தொலைவில் புதைபடுவது இந்த அசைவுகளும் தான்
உள சவுகரியம்
அந்த அறைச்சுவற்றில்
தொங்குகிறது
உற்சாகத்திற்கு தாவுதல்
என்பது
சாலச் சிறந்த வரம்
கடவுளின் யோகாவிலிருந்து
சூரியகாந்தி மலரை
பரிசளித்த ரகசியம்
சுவர்கள்
எப்பொழுதும்
கபடங்களுக்கு இறங்காதவை
மறவாமல்
சில முகங்களை
ஞாபகப்படுத்துபவை
பகல்
எப்பொழும்
சூரியனுக்கான
பகுதி
சில
நேரங்களில்
அதுவும்
நனைந்து விடுகிறது

ஞாபக நிறங்களை மாற்றிட வேண்டும்



சாதுர்யங்கள்
இணைந்துள்ள வாய்ப்பு
சாத்தியப் படடிருக்கிறது
பலம் பலவீனம்
பலவீனம் பலம்
பலம் பலம்
பலவீனம் பலவீனம்
எப்படிக் கூட்டினாலும்
காலம்
தனித்துத் தெரிகிறது
மறதிகளுக்கு உரம் போடவேண்டிய
கட்டாயம் தவிர
வேறு வழியில்லை
வாழ்ந்தேதான் ஆக வேண்டும்
அத்தனை சாதுர்யங்களையும்
ஒன்று திரட்டி
ஞாபக நிறங்களை மாற்றிட வேண்டும்
ஆய்வு அறிஞர்கள்
கூட்டங்கள்
என
பெரும் பரிசீலனைகளுக்குப் பிறகு
இறுதியாகிவிட்டது
மறதிகளுக்கான
உற்பத்திக் கலன்கனை
அதிகப் படுத்திவிட
முடிவாகிவிட்டது
வேறு வழியில்லை
உறத்த குரல்கள
ஒலிக்க
மறதிகளுக்கான
மாத்திரைகள்
மறதிகளுக்கான
அழகர்கள்
மறதிகளுக்கான
அழகிகள்
மறதிகளுக்கான
பேச்சுக்கள்
மறதிகளுக்கான
கவிதைகள்
மறதிகளுக்கான
கட்டுரைகள்
மறதிகளுக்கான
கவிதைகள்
மறதிகளுக்கான
கடிதங்கள்
மறதிகளுக்கான
சிபாரிசுகள்
அனைத்து மறதிகளுக்கான
நுட்பங்களும் தயாராகியிருக்க
சாதுர்யங்கள்
இணைந்துள்ள வாய்ப்பு
கூடியிருக்கிறது
இனி வரும் பொழுதுகளில்
மறதிகளின் வழியே
சாதுர்யங்கள்
அபாரமாக
விளையாடத் துவங்கிவிடும்
காலையில் வழக்கமான பரபரப்போடு வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். எல்லாம் தயாராகி இரு சக்கர வாகனத்தை வீட்டிலிருந்து காம்பவுண்டிற்கு வெளியே தள்ளக் கொண்டு வருகையில் கண்ணில் பட்டது. ஒரு மகிழ்வான காட்சி. இப்படி ஒரு பறவை காலையை வரவேற்றால் யாருக்குத் தான் மனம் மகிழ்ச்சி கொள்ளாது.
சாலையில் முன்னின்று சிறு மண் மேட்டை எதிர் புறமான நிலையில் கொத்திக் கொண்டிருந்த அந்த மரங்கொத்திப் பறவை. எனது சப்தம் கேட்டு தலை சாய்த்து என் பக்கம் திரும்பிப் பார்த்தது.
நின்று விட்டேன். அப்படியே வாகனத்தை திரும்ப வீட்டிற்குள் இழுத்து சென்றுவிட்டேன்..சில நிமிடத்தில் சப்தமில்லாமல் காம்பவுண்ட் சுவற்றில் சாய்ந்து அந்தப் பறவையை கவனித்துக் கொண்டிருந்தேன்.அது எனது அருகாமையில் குழப்பமில்லையென்று முடிவுக்கு வந்து மீண்டும் அதன் பணியைத் தொடர்ந்தது.
மிகவும் சுறு சுறுப்போடு கொத்திக் கொண்டிருக்கும் பாங்கைப் பார்த்து மிகவும் பசியான அதன் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
திரும்ப வீட்டிற்குள் ஓடி பள்ளிக்கு என்னுடன் வர விருக்கும் தங்கை மகன் தரணியை சப்தமில்லாமல்.இருக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்திற்குப் பிறகு மெதுவாக அழைத்து வந்து அவனுக்கு மரங் கொத்திப் பறவையைக் காண்பித்தேன். இருவராக வருவதைப் பார்த்ததும் சிறு வட்டப்பறத்தலில் எதிர் வீட்டு மேற்கூரை ஓட்டின் வரிசையில் இடத்தை தேர்வு செய்து அமர்ந்தது.
கொஞ்ச நேரம் அப்படியே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். சிறு இடைவெளிக்குப் பின் அதன் பசியா அல்லது எங்கள் மீது நம்பிக்கையா தெரியவில்லை மீண்டும் .கோடு போடுவதைப் போல நேராக நிலத்தைத் தொட்டது. அதைப் பிடித்துவிடலாமா?“ என்று மிக மெதுவாக கேட்டான். வேண்டாம். என தலையசைத்ததும். அமைதியாக இருவரும் வேடிக்கை பார்த்தோம்.
ஆமாம் இது மரங்கொத்தி தானே? அப்புறம் ஏன் மண்ணைக் கொத்திக் கொண்டிருக்கிறது.என்று கேட்டான். அதனின் சோகத்தை விளக்க இயலாமல் பசிதான் வேறென்ன என்றேன். சரி போலாம் லேட் பண்ணாதீங்க என்று சொல்லியபடி புத்தகப் பையை எடுக்க உள்ளே ஓடினான்.
அது தன் அதிகப் பசிக்கு மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தது. இதெப்படியிங்கு வந்தது.என்று யோசித்தபடி பழைய மரம் இருக்கும் பகுதியைப் பார்த்தேன். எந்த அறிகுறியும் இல்லாமல் வானம் வெட்ட வெளியாய்த் தெரிந்தது. எதிர் வீட்டு வேப்பன் மட்டும் பாதி இலைகள் காக்கி உடுப்பகளை தரித்துக் கொண்டும் மீதி இலைகள் ஒப்பக்குச் சப்பாக கொஞ்சம் பச்சையைத் தொடுத்தும் இருந்தது.
இதற்கு முன்னால் மரங்கொத்திப் பறவையை எப் பொழுது பார்த்தேன்... ம் ....என்று யோசிக்கையில் தலைக்கு பாரம் ஏற்ற விரும்பாமல் அப்படியே அத் துயரத்தை பாதியிலேயெ விட்டுவிட்டேன்.
ஆண்டுகள் குறுக்கும் நெடுக்குமாக மணடைக்கள் ஓடிக் கொண்டிருந்தது.
அது சுறுசுறுப்பை குறைக்கவில்லை .அதன் உடலின் சீரான வர்ண்ணங்கள் அதன அழகை வடிவமைத்திருக்கிறது.
ஊசியென மண் குப்பைகளுக்குள் இறங்கும் அதன் அலகு.ஏறக் குறைய ஒன்னரை இன்ச். இருக்கலாம் என குத்து மதிப்பாக கணக்கிட்டுக் கொண்டது மனம்..
அடுத்து செல்வதற்கு கிளைகளில்லை..மீண்டும் எப்பொழுது பார்ப்போம் என்கிற கேள்விகளோடு தரணியின் அவசரத்திற்கிரங்க வீட்டிற்குள் சென்று விட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு வந்தேன் .காலியான அவ்விடம் உணர்த்தியது. அப்பறவை விடைபெற்றுக்கொண்டதை ..
யார் இடைஞ்சலுக்கு வந்தார்களோ தெரியவில்லை.
அதன் வருகை மனதிற்கும் இந்த காலைக்கும் மென் உணர்வைப் பரிசளித்திருந்தது.