Saturday, July 16, 2016

ஊமைத் துயரங்கள்


விரித்த வண்டுகளின்
இறகுத்தூசிகள்
பட படக்க அசைகின்றது
சிக்கிய உயரத்திற்குள்ளிருந்து
எழும்பும் ஊமைத் துயரங்கள்
வாழ்வை உரசுகிறது
மொழித்தேர்செல்ல
வன்முறைகள்
நிசப்தத்திற்குள்
நிகழ்கின்றது
இறுதியாகிவிட்டது
இருள் மரம்
அழைக்கிறது
இனி
எப்பொழுதும்
திரும்பாத சைகையின்
பெரும் அழைப்பு
அது

No comments:

Post a Comment