Saturday, July 16, 2016

காதல் மணக்கும் கவிதைகள்


வயதென்னும்
பொருட்டில்லை காதலில்
உன்வயதைக் கொண்டு
என் காதலையல்லவா
பரிசீலித்தாய்
நீ
பார்க்க
ஆறாய் ஓடுகிறேன்
நரை வயதை வைத்துக்கொண்டு
இத் தடத்திடல்
........................
என்செய்வாய்
நிறத்தோனே
தோல்வியென்று
எதுவுமில்லை
இளமைக்குத் தெரியும்
ஒரு வேளை
என் பிரியத்தில்
தடுமாற்றமிருந்திருந்தால்
கூட்டத்தோடு அலலவா
கொன்றிருப்பாய்
எக்காளமிடும்
வயதிற்கும் புகழுக்கும்
சம்பந்தமில்லாத
காதலை
உள்ளங்கையில் வைத்தல்லவா
விளையாட்டாக்கினாய்
அன்பே
வெற்றி எனபது
காதலில்
ஆயினும்
வெறுப்பில்லை
உன் நடத்தையில்
வயதும்
கூட அழகு தான்
தரைக்கு வந்துவிட்டேன்
நிறத்தோனே
தாராளமாக
பூக்களோடு வரலாம்
இத் தடத்தில்

No comments:

Post a Comment