Monday, October 3, 2016

தொலைதூரம்
என்றால்
எல்லாமே
தொலைந்து போன
தூரத்திலிருந்து தான்
என்றான அர்த்தமல்ல

கண்களுக்குள் வராத தூரம்
மழையோ
சுவரோ
வீதியோ
சாதியோ
எதுவாக வேண்டும் இருக்கலாம்
எனக்கு எல்லாமே தூரம் தான்
பல மைல்களுக்கு அப்பால்
ஆனாலென்ன
பல ஊர்களுக்கும் அப்பால்
ஆனால் தானென்ன
முத்தமிடுவதோ
காரித் துப்புவதோ
எதுவானாலும்
காற்றோடும் நிலத்தோடும் தான்
நகரும் வாழ்வு
அதிகாரம்
-----------------
காகமாகியவள்
சரிந்த தாழ்வார உச்சியில்
இருந்து
பறந்து போகிறாள்

வெய்யிலுக்கும்
நிழலுக்குமாக
சிஸ்டர்
சிஸ்டர்
அழைக்கும் குரல்களுக்கு
ஓடோடி வருபவள்
இரத்தக் கரைகளை
நாலு இழுப்பில்
பஞ்சாக்கி எறிபவள்
கைகளில்
சாவுகளுக்கான
ஊசிகள்
இல்லை
மகாவின் ஊஞ்சல்
----------------------

மாகா
கவிஞன்
அவ்வப்பொழுது
கீரீடத்தைக் கழட்டி
முடி அரிப்பை தேய்த்துக் கொள்கிறார்

கிரீடம் என்பது
அரசவைக்கு செறுக்கு
நம்ம
மகாவுக்கு
தெரியாததாயென்ன
மகா
கவிஞன்
இறங்கவே இறங்காத
அரச ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறார்
ஊஞ்சலில் ஆடியபடிதான்
காதல் கடிதமே எழுதுவார்
பாருங்களேன்
பதினைந்து வருடங்களுக்கு முன்னால்
மூன்று
நான்கு
ரோசாப் பூக்களை
முத்தமிட்டு வீசி அளித்ததில்
புதினைந்து வருடங்களாகவும்
பொக்கிசத்தைப் போல
பாதுகாத்து
வருகிறேன்
இது
அதிசயம்
அதிசயத்திலும் அதிசயம்
யாருக்கும் கிடைக்காத
பாக்கியம் அல்லவா
விழாநாட்களில்
வருடத்திற்கு
ஒரு முறை
அரசவைக்கு
காதலர்
மகா
கவி
தெய்வத்தைப் பார்ப்பது
வழக்கம்
நெடிய
வரிசையில்
கண்ணில் பார்ப்பதே
இப்பிறவிக்கு
போதுமானதாக
இருக்கிறது
மகா உதிர்க்கும்
ஒரு
வார்த்தை போதும்
அப்படியா
நல்லாருக்கியா
என
ஸ்ஸகானா ராகத்தில்
பாடும்
மகாவை
எத்தனை பிறவியிலும்
காதலிக்கலாம்
அதுவும்
மகா
கொடுத்த ரோசாபூவை
இன்னும்
கண்ணுக்குள் வைத்து
பாதுகாக்கிறேன்
இன்னும்
ஆண்டுக்கு ஆண்டு
சபரிமலைக்கு
இருமுடிகட்டிப் போவதுபோல
நாங்கள்
கூட்டமாக
எங்கள்
மகாவை
கவிஞனைப் பார்க்க
சென்றுகொண்டுதான்
இருக்கிறோம்
இன்னும்
இரண்டு நூறு நாட்களில்
அரசவைத் திருவிழா
விரதமிருகிறேன்
இந்த முறை
எப்படியும்
இன்னுமொரு
ரோசாப்
பூ வை
முத்தமிட்டு
தந்துவிடுவார்
எங்கள்
குல தெய்வமே
மகா
கவி தான்
எங்கள் வீட்டில் பூனையென்றால் ஸ்விஸ்



ஸ்விஸ் ஸ்விஸ்
ஸ்விஸ் ஸ்விஸ்
என்று அழைக்கும் பூனை
விட்டிற்குள் நுழைந்ததும்
வாகனச் சக்கரத்தை
உரசுகிறது
பின்பு
கால்களை உரசுகிறது
கூடவே மியாக்களை
உதிர்த்து உதிர்த்து
நீவிவிடவும்
கொஞ்ச வைக்கவுமான
பூனையின் அன்பு
நெகிழ்சியானது
சில்வர் தட்டுக்கு பக்கத்தில்
பாயின் மேல்
போர்வையின் மேல்
சுருண்டு படுக்கும் பூனையை
ஸ்விஸ் ஸ்விஸ் என்று
அம்மா அழைப்பாள்
ஸ்விஸ் ஸ்விஸ் என்று
பிரகாசினி அழைப்பாள்
ஸ்விஸ் ஸ்விஸ் என்று
தரணியும் அழைப்பான்
அவ்வப்பொழுது
ஸ்விஸ் ஸ்விஸ் என்று நானும்
அழைப்பேன்
பூவாக
இல்லாத
பூ
பூ
போலல்லவா
பூக்கிறது

பூவுக்கென
பூ வேசம்
எதற்கு தாயி
பூவே
வாழ்வினத்தின்
கபடமற்ற
ஜீவனன்றோ
வான் பூவின் வசந்தன்



வானத்தில் மலர்ந்த
ஒற்றைப் பூ
பறக்கும்
இந்த சொற்களைத்தானே
கூடுகிறது
கீழாக
துளிப் புள்ளி
மானுட வண்ணத்தில்
காணும்
தொலைவில்
நீ
ரசிகனானாய்
பாவம்
ஏதோ ஒப்பேறுகிறது
தரிசனம்
வான் பூவின்
வசந்தன்
பூ
பூவாய் திரிகிறான்
வான் வெளியில்
வரிக்கோடுகள்
அழகுக்கானவையல்ல
அளந்து
பசித்த புலியாகி
இரவுலிருந்து
பகலுக்கும்
வீட்டிலிருந்து
வீதிக்குமாக
இணைக்கும் ஓவியத்தில்
கலைஞன்
கவிதையாகும் தருணம்
இவைதான் அன்றோ