Monday, October 3, 2016

மகாவின் ஊஞ்சல்
----------------------

மாகா
கவிஞன்
அவ்வப்பொழுது
கீரீடத்தைக் கழட்டி
முடி அரிப்பை தேய்த்துக் கொள்கிறார்

கிரீடம் என்பது
அரசவைக்கு செறுக்கு
நம்ம
மகாவுக்கு
தெரியாததாயென்ன
மகா
கவிஞன்
இறங்கவே இறங்காத
அரச ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறார்
ஊஞ்சலில் ஆடியபடிதான்
காதல் கடிதமே எழுதுவார்
பாருங்களேன்
பதினைந்து வருடங்களுக்கு முன்னால்
மூன்று
நான்கு
ரோசாப் பூக்களை
முத்தமிட்டு வீசி அளித்ததில்
புதினைந்து வருடங்களாகவும்
பொக்கிசத்தைப் போல
பாதுகாத்து
வருகிறேன்
இது
அதிசயம்
அதிசயத்திலும் அதிசயம்
யாருக்கும் கிடைக்காத
பாக்கியம் அல்லவா
விழாநாட்களில்
வருடத்திற்கு
ஒரு முறை
அரசவைக்கு
காதலர்
மகா
கவி
தெய்வத்தைப் பார்ப்பது
வழக்கம்
நெடிய
வரிசையில்
கண்ணில் பார்ப்பதே
இப்பிறவிக்கு
போதுமானதாக
இருக்கிறது
மகா உதிர்க்கும்
ஒரு
வார்த்தை போதும்
அப்படியா
நல்லாருக்கியா
என
ஸ்ஸகானா ராகத்தில்
பாடும்
மகாவை
எத்தனை பிறவியிலும்
காதலிக்கலாம்
அதுவும்
மகா
கொடுத்த ரோசாபூவை
இன்னும்
கண்ணுக்குள் வைத்து
பாதுகாக்கிறேன்
இன்னும்
ஆண்டுக்கு ஆண்டு
சபரிமலைக்கு
இருமுடிகட்டிப் போவதுபோல
நாங்கள்
கூட்டமாக
எங்கள்
மகாவை
கவிஞனைப் பார்க்க
சென்றுகொண்டுதான்
இருக்கிறோம்
இன்னும்
இரண்டு நூறு நாட்களில்
அரசவைத் திருவிழா
விரதமிருகிறேன்
இந்த முறை
எப்படியும்
இன்னுமொரு
ரோசாப்
பூ வை
முத்தமிட்டு
தந்துவிடுவார்
எங்கள்
குல தெய்வமே
மகா
கவி தான்

No comments:

Post a Comment