Monday, October 3, 2016

தொலைதூரம்
என்றால்
எல்லாமே
தொலைந்து போன
தூரத்திலிருந்து தான்
என்றான அர்த்தமல்ல

கண்களுக்குள் வராத தூரம்
மழையோ
சுவரோ
வீதியோ
சாதியோ
எதுவாக வேண்டும் இருக்கலாம்
எனக்கு எல்லாமே தூரம் தான்
பல மைல்களுக்கு அப்பால்
ஆனாலென்ன
பல ஊர்களுக்கும் அப்பால்
ஆனால் தானென்ன
முத்தமிடுவதோ
காரித் துப்புவதோ
எதுவானாலும்
காற்றோடும் நிலத்தோடும் தான்
நகரும் வாழ்வு

No comments:

Post a Comment