Monday, October 3, 2016

தெரியாமல் செய்வதில்லை



யோக்கியமில்லாமல்
காரியத்தை ஆற்ற வேண்டுமெனில்
யாருக்கும் தெரியாமல்
இருக்க வேண்டும்

அது முடியாது
உள்ளங்கைகளில்
அரிக்கிறது
பணிக்கும் தொழிலின் கூரைகளுக்குள்
ஓராயிரம் கண்கள்
கனவு இதழி இடுப்பிலிருந்து
சுருக்குப் பை உருவ
ஆயிரம் புனைசொற்கள்
தூவி மண்டபங்களை
செய்யலாம்
வாங்கித் திங்க லட்சம் திசைகள்
அழைக்கலாம்
சவ்ந்தர்ய வரிகளை
கவிதைகளுக்குள்
பட்டவர்த்தனமாக
ஒட்டகங்கள்
ஓடுவது கண்களுக்குள்
தெரிகிறது
கண்களுக்குத் தான்
சொல்கிறேன்
ஒட்டகங்களின் தாகம் தானே
கவிதை
அதனால் தெரியாமல்
செய்வதற்கு
ஏதேனும் உண்டா
கண்களே

No comments:

Post a Comment