உயிர் பேசும் மலர்
பாதங்கள்
மண் பட்டவுடன்
எம் மணப்பெயரை
உணர்வாயாக
வெய்யிலை அருந்தச் செல்லும் முன்
இந்தக் குயவனுக்கு
கடன்படத்
தொடங்கிவிட்டாய்
தாகம்
தணிக்க
உயிர்பேசும் மலர் ஒன்றை
மண் குவளையில் பதித்து
பரிசாக அனுப்பியிருக்கும்
வெப்பக்
காற்றில்
கோடை மலர்களை தரிசிக்க
வாய்ப்பிருக்கிறது
விற்பனைத் துறையின்
பீடத்திலிருந்து ததும்பும்
கிழக்குரல்
கூவ
வயதின்
விதியே
மென்மை நெய்த
கீழ் சட்டை நுணியின் முனையில்
கண்ணாடிக் கண்களை
சரி செய்துகொள்
தட்டுப்படாத பருவத்தில்
புத்தம் புதியதாய் பார்
மாய மகுடிகளுக்கு அசையாத
சிறு
புற்றுக் குடிகளை