Friday, March 21, 2014

உயிர் பேசும் மலர்



உயிர் பேசும் மலர்

பாதங்கள்
மண் பட்டவுடன்
எம் மணப்பெயரை
உணர்வாயாக

வெய்யிலை அருந்தச் செல்லும் முன்
இந்தக் குயவனுக்கு
கடன்படத் தொடங்கிவிட்டாய்

தாகம் தணிக்க

உயிர்பேசும் மலர் ஒன்றை
மண் குவளையில் பதித்து
பரிசாக அனுப்பியிருக்கும்
வெப்பக் காற்றில்

கோடை மலர்களை தரிசிக்க
வாய்ப்பிருக்கிறது

விற்பனைத் துறையின்
பீடத்திலிருந்து ததும்பும்
கிழக்குரல் கூவ

வயதின் விதியே

மென்மை நெய்த
கீழ் சட்டை நுணியின் முனையில்
கண்ணாடிக் கண்களை
சரி செய்துகொள்

தட்டுப்படாத பருவத்தில்
புத்தம் புதியதாய் பார்

மாய மகுடிகளுக்கு அசையாத
சிறு புற்றுக் குடிகளை

No comments:

Post a Comment