Wednesday, March 5, 2014

ஓசைகளுக்குள் படிந்திருக்கும் இந்தச் சொற்கள்


 ஓசைகளுக்குள் படிந்திருக்கும் இந்தச் சொற்கள்


எதிர் பார்க்கவேயில்லை

இவ்வளவு விரைவில் உணரும்
தருணம் வாய்த்திருக்கிறது
வெண்முடிகோதும் ஆணவத்திற்கு

விட்ட குறையொன்று
எந்தப் புள்ளியிலிருந்தோ
வேறெங்கிருந்தோ 
தொடங்கியிருக்கிறது
முதல் உதிர்வுச் சோதனையை

மறந்த முகங்களைத் தேடும்
அவசரங்களுக்குள்
பரபரப்பாகியிருக்கும் வேளையில்

பாதுகாகக்கப்பட்ட
அரசவைச்சுவர்களிலிருந்து
சின்னஞ் சிறிய கற்கள்
வீழ்ந்து விடத் தொடங்கினாலும்

அதன் ஓசைகளுக்குள்
இந்தச் சொற்கள் படிந்திருப்பதை
மறுக்க வாய்ப்புகளில்லை

தெருவோரக் காட்சிகளில் விழாது
நிழலைக் கூட பத்திரப் படுத்தியிருக்கும்
குளிர் சாதன பதவிகளுக்குள்
ஓய்வுகளிலிருந்தாலும்

ஆதிக்கம் கொள்ளும் வெய்யிலின் வலைகளுக்குள்
ஏந்திக் காத்திருக்கும்
அந்த வர்ணங்களின் முகங்களில்
வழிந்து விடாதா ஈரம்

No comments:

Post a Comment