Monday, January 19, 2015

கரையைச் சேராத சப்தங்களுக்குள்
அமைதிக்கு பாதையில்லை

கொடுக்கப்பட்டிருக்கும்
அவகாசங்களுக்குள்

வாசமிடும் நர்த்தனங்கள்
தொடர்ந்து கொண்டிருக்கட்டும்

அதனதன் வீக்கம்
அதன்களை வெளிப்படுத்தும்

காலங்கள் அழிந்து போவதற்க்குள்

அதன் கண்களை குருடாக்க
இயலுமாயின்

தேசம் திரும்பிப் படுக்கட்டும்