புல்லாங்குழலோடு அழையும் கண்ணன்
எஞ்சிய புல்லாங்குழலை மட்டுமே
தனதாக்கிக் கொண்டு
கொஞ்சி துயிழெலுப்பும் கோபியர்களை
அவரவர் வீட்டுக்கு திருப்பி
அனுப்பி விட்டு
உள்ளே அரித்துக் கொண்டிருக்கும்
எல்லா வேதனைகளையும்
புல்லாங்குழலால் இசைத்தபடி
அழைந்து கொண்டிருக்கிறான் கண்ணன்
மார்கழிக் கூதலில் பிரிந்த
கோபியர்கள் குமுறும் ஏக்கங்களெல்லாம்
வாசணைகளாய்
கண்ணனைச் சுற்றிய வனமெங்கும்
மிதந்து கொண்டிருந்தன
மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் கூட
துாது சொல்லாத
வெகு துார வந்து விட்ட கண்ணன்
மார்கழிப் பாடல்களை
புல்லாங்குழலால் இசைத்தபடி
கடந்து போவதை அறிந்த மக்கள்
அறுவறுப்பான பட்டங்களை சூடியபடி
கடந்து கொண்டிருந்தார்கள்
வெறுத்துப்போய்
திருச்சி சாலை பக்கங்களில்
கொஞ்சகாலம திரிந்து கொண்டிருந்த கண்ணன்
கதிரி“ கஸ்துாரி“ வசந்தா“ சிரிகரி
போன்ற பஞ்சாலை மில்களை
இயக்க வைக்கும் முயற்சிகளில்
தோல்வி கண்ட துயரங்களில்
நகரத்தை விட்டு காடுகளுக்கு
திரும்பியிருந்தான் கண்ணன்
தற்பொழுது
காடுகளையும் இழந்து விடும்
அபாயத்தில்
கையிலிருந்த புல்லாங்குழலை
பத்திரப்படுத்தி ஒரு முறை
உற்றுப்பார்த்து முத்தமிட்டு
ஓராயிரம் இசைகளோடு
நடையை கட்டுகிறான்
கோபியர்களின் கண்ணன்
எஞ்சிய புல்லாங்குழலை மட்டுமே
தனதாக்கிக் கொண்டு
கொஞ்சி துயிழெலுப்பும் கோபியர்களை
அவரவர் வீட்டுக்கு திருப்பி
அனுப்பி விட்டு
உள்ளே அரித்துக் கொண்டிருக்கும்
எல்லா வேதனைகளையும்
புல்லாங்குழலால் இசைத்தபடி
அழைந்து கொண்டிருக்கிறான் கண்ணன்
மார்கழிக் கூதலில் பிரிந்த
கோபியர்கள் குமுறும் ஏக்கங்களெல்லாம்
வாசணைகளாய்
கண்ணனைச் சுற்றிய வனமெங்கும்
மிதந்து கொண்டிருந்தன
மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் கூட
துாது சொல்லாத
வெகு துார வந்து விட்ட கண்ணன்
மார்கழிப் பாடல்களை
புல்லாங்குழலால் இசைத்தபடி
கடந்து போவதை அறிந்த மக்கள்
அறுவறுப்பான பட்டங்களை சூடியபடி
கடந்து கொண்டிருந்தார்கள்
வெறுத்துப்போய்
திருச்சி சாலை பக்கங்களில்
கொஞ்சகாலம திரிந்து கொண்டிருந்த கண்ணன்
கதிரி“ கஸ்துாரி“ வசந்தா“ சிரிகரி
போன்ற பஞ்சாலை மில்களை
இயக்க வைக்கும் முயற்சிகளில்
தோல்வி கண்ட துயரங்களில்
நகரத்தை விட்டு காடுகளுக்கு
திரும்பியிருந்தான் கண்ணன்
தற்பொழுது
காடுகளையும் இழந்து விடும்
அபாயத்தில்
கையிலிருந்த புல்லாங்குழலை
பத்திரப்படுத்தி ஒரு முறை
உற்றுப்பார்த்து முத்தமிட்டு
ஓராயிரம் இசைகளோடு
நடையை கட்டுகிறான்
கோபியர்களின் கண்ணன்