Thursday, December 6, 2012

அங்குமொருகீதம்

அங்கு மொருகீதம்

நிலை குலையாத இருப்பை
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
வழி சொல்ல ஏதுமுண்டோ

ஒரு மலையை
தள்ள நினைப்பது தானென்ன
இந்த நீர்ப் பயணத்திற்கு

உறத்த மூச்சோடு
உந்தி மோதிக் கொண்டிருக்கும்
கடல் பாறையின் ஈரம்
நீராலானது தான் என்றாலும்

அங்குமொரு கீதம்
பிறப்பதென்பது தான் நித்தியம்

அந்த மனநிலையில்
அந்த கணத்தில்
அங்கு ஒரு ஜீவன்
கரைந்து போவதற்கு
தடைஎதுவுமுண்டோ

சொல்லடி சம்பூரணா

No comments:

Post a Comment