Monday, December 10, 2012

கூ..........குக்........கூ

 கூ.......குக்.....கூ


கூ.........
குக்.....கூ.......

குயிலொன்று கூவ
கிளைகளில் தான் உதிர்ந்திடுமோ
கனிகள்

கானகத்தில்
ஒவ்வாத குரலொன்று
அலைய

சலனங்கள் தான்
வழிந்திடுமோ

சடச் சடவென உடைந்த
மரக் கிளைகளின்
சப்தங்களில்

இடம் மாறி அமர்ந்த
பறவைகளின் வழித்தடங்கள்

குறைந்தா போய்விடும்
இந்த குவளயத்தில்

குயிலொன்று கூவ
உண்டன்றோ இனிமை

நெஞ்சினிக்க
பாட்டொன்று கேட்க

குயிலொன்று
கூவுதுங்ங்ங்ங்ங்ங்கோவ்

No comments:

Post a Comment