Monday, October 3, 2016

கவிதை


அடர்ந்த அபூர்வ வாசனையை நுகர்தல்
சாத்தியமாகிறது
தொலைவாக நீர்போல வளைந்து நெருங்கி சற்றுமுன்
வசம் வந்து சேர்ந்துள்ளது
ஆயிரமாயிரம் கனவுகளை
உள்ளடக்கிய
அடைதலில்
எந்த ரசானுபவத்தை
தரப்போகிறது
எவ்வாறாயினும்
சாமியாடி போலவும்
கோழிகளின் குருதியை
அப்படியே
பசியன்புமாறாமல் ருசிப்பதில்
சிக்கல்களேயிருக்காது
என்றே துடிக்கிறது
முனைப்பு

No comments:

Post a Comment