Monday, October 3, 2016

பேருண்மை




தற்பொழுது தான் இளவெய்யில்
படர ஆயத்தம் கொள்கிறது
யாருடைய பற்றுதலுக்காகவோ
தெருமுனையில் காத்திருக்கும்
கீரையிலைகள்
பருவ தளதளப்புடன்
ஜொலிக்கிறது
சின்னஞ்சிறு குழந்தையின் கையிலிருந்து
தவறிவிழும் மிட்டாயைப்போல
விழுந்து படரும் காலை
பேருண்மையாக
குப்பைகளின் மீதும்
உன்னதங்களின் மீதும்
பொழிந்து செல்கிறது

No comments:

Post a Comment