Monday, October 3, 2016

வான் பூவின் வசந்தன்



வானத்தில் மலர்ந்த
ஒற்றைப் பூ
பறக்கும்
இந்த சொற்களைத்தானே
கூடுகிறது
கீழாக
துளிப் புள்ளி
மானுட வண்ணத்தில்
காணும்
தொலைவில்
நீ
ரசிகனானாய்
பாவம்
ஏதோ ஒப்பேறுகிறது
தரிசனம்
வான் பூவின்
வசந்தன்
பூ
பூவாய் திரிகிறான்
வான் வெளியில்

No comments:

Post a Comment