உள்ளங்கைக்குள்
அடங்கிய உன் பகலை
ஆரஞ்சு பழத்தொப்பையென
உரிக்கும்பொழுது
தடுமாற்றங்களும்
சிற்சில பொய்களும்
மறைக்கப்பட்ட அறை
ரகசியங்களும்
விரல்கள் நனைக்கும்
ஈரமென
கசிந்து நிரம்புகிறது
அறிந்தும் அறியாததைப் போல
இன்றைய நம் பகலின்
சிறு துண்டைப் பிய்த்து
ருசித்துக்கொள்கிறோம்
அவரவர்களின் பகல்கள்
மற்றவர்கள் கைகளில்
அருஞ்சுவை
உரிக்கும்பொழுது
தடுமாற்றங்களும்
சிற்சில பொய்களும்
மறைக்கப்பட்ட அறை
ரகசியங்களும்
விரல்கள் நனைக்கும்
ஈரமென
கசிந்து நிரம்புகிறது
அறிந்தும் அறியாததைப் போல
இன்றைய நம் பகலின்
சிறு துண்டைப் பிய்த்து
ருசித்துக்கொள்கிறோம்
அவரவர்களின் பகல்கள்
மற்றவர்கள் கைகளில்
அருஞ்சுவை
No comments:
Post a Comment