Saturday, July 16, 2016

நகர்வலம்


கையுறைக்குள் உலவும் கரங்கள்
கடவுளின் கரங்களேயில்லை
கையுறைக்குள் உலவும் கரங்கள் கருணைகளின் கரங்களேயில்லை
கையுறைகளின் மறைவுகளுக்கிடையில்
சூத்திரங்களின் கண்கள் விழித்துக்கொண்டேயிருக்கிறது
கையுறைகளுடன் காத்திருக்கும் ஏதாவதொரு கைகள்
மூன்று சக்கர வண்டியை தள்ளிக்கொண்டேயிருக்கிறது
மூன்று சக்கர வண்டியில் பொருத்தப் பட்டிருக்கும்
இசைக் குரல்கள்
வழக்கம் போல
கண்ணீர் வரிகளை சொட்டிக் கொண்டேயிருக்கிறது
மேலும்
வழக்கம் போல
விரக்திகளின் சுருதிகளை கலைந்துவிடாமல்
கண்காணித்துக் கொள்கிறது
யாராவது ஒருவரின் கெஞ்சலுக்குமிடையில்
யாராவதொரு வரின்
புகழ்களுக்கிடையில்
யாராவது ஒருவரின்
சுகங்களுக்கிடையில்
ஏதாவது ஒரு
கையுறையுடனான கரங்களின்
உந்துதலுடன்
மூன்று சக்கர வண்டி நகர்ந்து கொண்டேயிருக்கிறது

No comments:

Post a Comment