Wednesday, February 24, 2016

மென்மையை நெஞ்சோடு ஒத்திக் கொள்பவர்
எவன்
நாண்டுகிட்டாலென்ன
அந்த பட்டாம் பூச்சி
ஒயர்க் கோடு போட்டுக் கொண்டு
சிறு
படக்
சிறு
படக்
சின்னஞ் சிறு
படக்
என
பறந்து
போவதாக
ஹா..ஹ
ஹா..ஹ..வென
குரலெலுப்பி
மென்மையால் ஊது
யார் வேண்டாம் என்கிறார்கள்
எவள்
துாக்கில்
தொங்கினாலென்ன
வெகு சுத்தமாக
கலைக்கான
நளின வனப்பை
நெஞ்சோடு ஒத்தி கண்களை
முடிக் கொள்
கருமம் புடுச்சவனெ
காலம்
இன்னும் ஏண்டா
உங்களெல்லாம் விட்டுவச்சிருக்கு

No comments:

Post a Comment