Sunday, February 24, 2013

இ.................



இப்படி
துண்டு துண்டாக்கப் பட்ட
மீன்களின் சுவையை ருசித்துக் கொண்டிருக்கும்
முன்னும் பின்னும்
போதைகள் ஏறிக் கொண்டிருக்கலாம்
இறங்க ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தில்
மிதிபடும்
குரல்களின் உயிர்களை
கணக்கிடப்படாத வயதுகளின் நரைகள்
கரைந்து போய்விட்டதான பாடல்களை
உரக்க பாடிக் கொண்டிருக்கும்முடிவில்
வெற்றிடத்தை அறிய இயலுமாயின்
உதிர்ந்து போகும்
ரோமக் கற்றைகளாகிவிடுகிறது
காலம்

No comments:

Post a Comment