Monday, February 11, 2013

உஷ்...உஷ்....உஷ்....பாடல்



உஷ்.......உஷ்......உஷ்......பாடல்


உஷ்...உஷ்....உஷ்....பாடல்
ஏதாவது ஒரு கணத்திலேனும்
வந்து காதில் விழுந்து தொலைக்கிறது

அவ்வப்பொழுது
காட்சிகளைக் காட்டிக் காட்டி
உறுத்தச் செய்யும் சமிக்ஞையில்

பாதம் தைத்த வலிகொண்டு உதறி விலக

ஆறுதல்களாய்
அழைத்துப் போவதென்னவோ
கவிதைகள் தான்

பங்கமற்ற இயல்புக்கு வேறு வழி?

வாலுக்கு ஒரு பெயர்
முதுகுக்கு ஒரு பெயர்
தலைக்கு ஒரு பெயர்

மெது மெதுப்புச் சூட்டில்
ஆபரணத்து ஊஞ்சல்களில் ஆட

உஷ்...உஷ்....உஷ்......பாடல்
பட்டமரத்திற்கு எதுக்கு தாயீ

காலத்தின் அலகிற்கு
யார் தானென்ன
கொத்தும் துளி சப்தம் மட்டும் தான்
அந்த நாளுக்கு மிச்சம்


No comments:

Post a Comment