Monday, February 25, 2013

குருவிகள் பாட.......


குருவிகள் பாட
அதிர்வுகளா ஏற்படும்
புரு புரு ஊட்டும்
சுகந்தானல்லவா
வெப்பத்தில் வெந்து புழுங்கும்
பகல் உறைந்த காட்டிற்கு
தனிப்பட்ட வகைமையென உண்டோ
அன்பிற்கு
ஆனாலும்
பொது என வந்துவிட்ட பின்
சுயங்களுக்கல்லவோ விடுமுறை
சர சர வென ஏரிப்போய்விட்ட ஏணியில்
பழுதடைந்த தென்னவோ காலமல்லவா
அப்படியாவா இருக்கிறது முகம்
அப்படியேதான் இருக்கனுமா நிலை
உயரத்துக் கோம்பையிலிருக்கும் கண்களுக்கு
மண்ணின் நிறம் அறியாதா
யார்தான் சுட்டிக்காட்டும் பொறுப்பை வைத்துக் கொள்வது
தோட்டத்து செடிகளை பாராமரிக்க  
சொந்தத்திற்கு தெரியாதா
யார் செய்தாலென்ன
வலிமட்டும் இங்கல்லவா வந்து விழுகிறது
குருவிகளின் கீச் கீச் குரல்களில்
மயங்காத மனமும் உண்டோ

No comments:

Post a Comment