Saturday, February 23, 2013

இலைகள்.............

இலைகள் துளிகூட அசையவில்லை
இந்த மாலை நேரம்
காற்றையே கூட காணோம்
எத்தனையோ சொற்களை
குரல்களை
அழுகைகளை
தேம்பல்களை
மிரட்டல்களை
கேட்டுக் கொண்டிருந்த பகல்களை தொலைத்துவிட்ட
சிறு மரத்தின் இலைகள்
மெர்குரி விளக்கின் மஞ்சள் கறைகளோடு
தனித்துக் கிடக்கிறது மௌனத்திற்குள்
அதன் உடலை அசைக்க கொஞ்சம் காற்றேனும் வரக்கூடாதா
கொஞ்சம் ஆசுவாசமடையட்டும்
அதற்கு
இந்த அந்திப் பொழுதாவது துணைபுரிந்தால் தேவலாம் தான்

No comments:

Post a Comment