Wednesday, February 27, 2013

காக்கா........

காக்கைகள் கொத்தி தீர்த்துவிட்ட
அலுப்பில் பறத்துவிட்டன கூட்டம்
லொள்ளை யாகிப்போன தலையோடு
கிடந்த நாளை
விட்டுப் போய்விட்டது எல்லாம்
தார் சாலையோடு சாலையாகிப்போன
பிந்தைய நாட்களில்
தொடர்ந்து கொண்டிருக்கிற பயணத்தில்
எவ்வித பூரிப்போ ஆரவாரமோ
இல்லவேயில்லை
காக்கா கூட்டங்ளாகவேவரும்
என்பதெல்லாம் இல்லை
ஒன்றை ஒன்றாகவே சரியாய்புரிந்து கொள்ளுகிற
வாய்ப்பு மட்டும்
தற்பொழுது வரவே கூடாது
யாவருக்குமிடையில்

No comments:

Post a Comment