பூ போலவே இல்லை
இதழ்களின் தொகுப்பு
தனித்தனியாக
சிதைவுற்று கிடக்கிறது
அதன் நிறங்களும் தான்
அலங்கோலமாகியபடி
ஒரு பகலைப்போல
சுருங்கிக்கொண்டு கிடக்கிறது
அடையாளங்களும்
இயல்பாகவேயில்லை அந்த முகம்
தலைகுனிந்து போக
அருள்வாயாக
நாளோ கிழமையோ
போய்விடட்டும்
விட்டுவிடலாம்
சும்மாவாகவே
No comments:
Post a Comment