Friday, February 22, 2013

இரண்டு மாக்கா டாவுகளின் கதை


எதிர் பார்த்திராத அன்று இரவு
அலை பேசியில் அழைத்த
காவியத் தலைவனின்
வார்த்தைகளால் (சாரி) பூரிப்புகளால்
தமது தேவதை களைப்பற்றி தலைவனே
புகழ்பாடிக் கிறங்கிய அந்தக்கணம்
தாமுறுக மதி மயங்கி
மெய்யென்றே
இருக்கிற பணத்தை சுரண்டி எடுத்து
ஆளுக்கு ஒரு லிட்டர் எரி பொருளை நிரப்பி
வண்டிக் கிக்கரை உதைக்க
தலைவனின் ஏ.சி அறைக்குத் தலை தெரிக்க
பறந்த இரண்டு மாக்கா டாவு களின் பரிதாப கதையை
எத்தனைபேருக்குத் தெரியும்

விடிகாலை சந்தித்த வேளை
சரியில்லையோ என்னவோ
சிங்காரியைத் தொலைத்துவிட்ட
வருத்தமோ என்னவோ
அதிபவ்யமாய்
நகர்ந்த பெரும் பூசாரிபோல
ஓரிரண்டு சடங்குச்சொற்களோடு
தியானத்திற்கு சென்று விட்ட
காவ்யத் தலைவனின்மாற்றத்தை உணர்ந்த
 இரண்டு மாக்கா டாவுகள்
குழம்பி பின் தெளிந்த கோபத்தில்
இரண்டு கண்ணாடி டம்ளரைஉடைத்தும்
சுவற்றைக் குத்தி கரத்தை வீங்க வைத்துக் கொண்டதும்
இந்த மாக்கா டாவுகளின்
பிரதான கதைகளில் இதுவும் ஒன்று

பெரிய்ய குங்கும்த்தோட வந்த குருவம்மா
சொல்லிபுட்ட குறியில தா
காவியத்தலைவனின்
குட்டெல்லா வெளிபட்டுது

சோகத்துல மூழ்கிப் போன
இரண்டு மாக்கா டாவுகளு
ஒரு ஆப் பாட்டில் தவறிநொருங்கிய
வேதனையோடு ஊருக்கு திரும்புன கதைல
என்ன புரிஞ்சுதுன்னா
அம்மாவாசைக்கு போகாம
பவுர்ணமிக்கு போயிறுந்தா
காவியத் தலைவனு நிம்மதியா இருந்திருப்பாரு
சிங்காரிக்கும் கெட்ட பெயரு வந்திருகாதுங்கரேன்
சரிதானுங்களே 
 

No comments:

Post a Comment