Thursday, January 24, 2013

இப்ப என்னடா பிரச்சனை என்றான்
நண்பன்

அதைத் தானடா இத்தனை நாளாய்
உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
என்றேன்

சொன்னதையே தானடா
திரும்பத் திரும்ப
சொல்லிக்கொண்டிருக்கிறாய் என்றான்

அதையே தானடா எனக்கும்
மீண்டும் மீண்டும்
சொல்லத் தோன்றுகிறது என்றேன்

வேறு ஏதாவது பேசடா என்றான்
அது தானடா தெரியவில்லை
என்றேன்

சரி யோசிப்போம்
இருவரும் காதுகளை ஒரு கணம்
யோசித்தபடி
(அவன் தொட்டுப் பார்த்துக்கொண்டான்)
பாவம் அது என்ன செய்யும்
அது பாட்டுக்கு அது

எங்கு சுற்றினாலும்
ஆரம்பத்தையே வந்தடையும்
பரிதவிப்பில்
தப்பித்து விட்ட தாய் அவனும்
விலகிச் செல்கையில்

ஓய்ந்த பாடில்லை குரங்கு

அதற்கான ருசியை
அது தானே தேடவேண்டும்

மீண்டும் பழைய
மரத்திலேயே தொற்றிக் கொண்டு விட்டது

No comments:

Post a Comment