Monday, January 21, 2013

மௌனத்திற்கான அதிர்வுகள்



மௌனத்திற்கான அதிர்வுகள்


எவ்வித குழப்பங்களும் இல்லை

வாடா மல்லி பூக்களுக்கும்
நந்தியா வட்டப் பூக்களுக்கு்ம்
சம்பங்கிப் பூக்களுக்கும்
செவ்வந்திப் பூக்களுக்கும்

வித்தியாசம் தானில்லையா

வேறுபாடு அறியாத வரண்ட
மண் மேடா மனம்

சிதறிக்கிடக்கும்
நந்தியாவட்டப் பூக்களுக்கும்
செண்டு மல்லிச் செடிகளின்

ஈரத்திற்குமிடையே

வெட்டுக் கிளியொன்று
தாவிக் கொண்டிருப்பதை

நெருக்கமாக இருக்கும்
செம்பருத்திப் பூக்கள் தான் உணராதா
இவற்றிலென்ன குழப்பம்




No comments:

Post a Comment