Wednesday, January 9, 2013

குருவிகளின் குரல்கள்

குருவிகளின் குரல்கள்


சொத்தைப் பல்லுக்கெனஅம்மாவின் சிபாரிசுப்படி
ரெட் டூத் பவுடரைத்தேய்த்தக் கொண்டிருந்தேன்

வாசலின் முன்னால் இறங்கி
சிவந்த எச்சிலைத் துப்ப வேண்டியிருந்தது
சாக்கடையில்

வேலைக்கு புறப்படும் நேரத்தை கவனித்தபடி
வடக்குப் பக்கம் திரும்பிப் பார்த்தேன்

நடமாற்ற மற்ற வீதியின்முன்வீட்டுசுவரருகில்
இட்லி வியாபாரம் முடித்து
இரவு 11மணிக்கு தினமும் வரும்
தம்பதியர்களின் வெளுத்தநிற தள்ளு வண்டி
நின்றுகொண்டிருக்கிறது

அதற்கு பின்னால்
சலவை செய்து கொண்டிருக்கும்
இளம் தாயொருத்தியின் பரபரப்பு

அவளுக்கு பின்னால்
ரவி அண்ணனின் வாடகை வேன்
கோபத்தில் உள்ளதைப் போல
முக்த்தை திருப்பியபடி ஓய்விலிருந்தது

மீணடுமொரு முறை எச்சிலைத்
துப்பியபடி தெற்குப் பக்கம் திரும்பினேன்

ஆட்களற்ற பாதை உம்மென்றிருந்தது

எதிரெதிர் வீடுகளிலிருந்து
பாத்திர ஒலிகளாய்கேட்க்கும் வேளையில்

மா மா வெனகத்தியபடி
அலைபேசியை கைகளில் திணித்து
ஓடிப்போனான் “தரணி“ பொடியன்

அலை பேசியின் எதிர் முனையிலிந்த நண்பன்
எப்பொழுது டா பார்க்கலாம்

நீண்ட நாளாகிவிட்டதான புகாரையும்
சொல்லிக் கொண்டிருக்கும் வேளை

இடையே கிரீச் கிரீச் சென மெலிதாய்
ஒலிக்கும் ஓசையை கவனித்தேன்

என்னடா
குருவிகள் சப்தங்கள் போல் கேட்கிறதே என்றேன்

விட்டில் தானிருக்கிறேன் இங்கு தான்
குருவிகள் விளையாடிக் கொண்டிருப்பதாக சொன்னான்

விடைபெற்ற பொழுதிலும் ஒருவிதமான மகிழ்ச்சி
வேலைக்கு பறப்பட்டுவிட்டேன்

 செவிகளுக்குள் இனிமையாய் உலவிக் கொண்டிருந்ததென்னவோ

குருவிகளின் குரல்கள் மட்டும் தான்

No comments:

Post a Comment