வெறிச் சோடிய வீதி
சுயமிழந்த அமைதி
சூழ்ந்திருக்கும் இந்த நேரம்
வெய்யிலும் இல்லை
கருக்கலும் இல்லை
மிதமான ஓய்வில் இருக்கிறது
சீமை ஒடுகள்
புதியதாய் வேய்ந்த காலத்தில்
அப்பாவின் இளமைத் தோற்றம்
ஞாபகத்திற்கு வரும்
கூடவே
ஆறுமுக மாமாவும் தான்
கூரையின் மேலிருந்து
இடறி விழுந்து
நடக்க இயலாமல் போனது
அப்பொழுதிருந்து தான்
காரணமேயில்லாமல் இப்படி
சூழ்ந்த தனித்த இருப்பின்
யோசனையில் அசைய
பக்கத்திலிருந்த தண்ணீர் சொம்பை
சாய்த்திருக்காமல் இருந்திருந்தால்
மேலும் ஒரு வருத்தம் கூடாமல் இருந்திருக்கும்
சரி
நனைந்த லுங்கியை
மாற்றிக்கொள்ள
இனி
அழுக்கு மூட்டையைத் தான்
திறக்க வேண்டும்
சுயமிழந்த அமைதி
சூழ்ந்திருக்கும் இந்த நேரம்
வெய்யிலும் இல்லை
கருக்கலும் இல்லை
மிதமான ஓய்வில் இருக்கிறது
சீமை ஒடுகள்
புதியதாய் வேய்ந்த காலத்தில்
அப்பாவின் இளமைத் தோற்றம்
ஞாபகத்திற்கு வரும்
கூடவே
ஆறுமுக மாமாவும் தான்
கூரையின் மேலிருந்து
இடறி விழுந்து
நடக்க இயலாமல் போனது
அப்பொழுதிருந்து தான்
காரணமேயில்லாமல் இப்படி
சூழ்ந்த தனித்த இருப்பின்
யோசனையில் அசைய
பக்கத்திலிருந்த தண்ணீர் சொம்பை
சாய்த்திருக்காமல் இருந்திருந்தால்
மேலும் ஒரு வருத்தம் கூடாமல் இருந்திருக்கும்
சரி
நனைந்த லுங்கியை
மாற்றிக்கொள்ள
இனி
அழுக்கு மூட்டையைத் தான்
திறக்க வேண்டும்
No comments:
Post a Comment