Tuesday, January 22, 2013

வெறிச் சோடிய வீதி
சுயமிழந்த அமைதி
சூழ்ந்திருக்கும் இந்த நேரம்

வெய்யிலும் இல்லை
கருக்கலும் இல்லை

மிதமான ஓய்வில் இருக்கிறது
சீமை ஒடுகள்

புதியதாய் வேய்ந்த காலத்தில்
அப்பாவின் இளமைத் தோற்றம்
ஞாபகத்திற்கு வரும்

கூடவே

ஆறுமுக மாமாவும் தான்

கூரையின் மேலிருந்து
இடறி விழுந்து

நடக்க இயலாமல் போனது
அப்பொழுதிருந்து தான்

காரணமேயில்லாமல் இப்படி
சூழ்ந்த தனித்த இருப்பின்

யோசனையில் அசைய

பக்கத்திலிருந்த தண்ணீர் சொம்பை
சாய்த்திருக்காமல் இருந்திருந்தால்

மேலும் ஒரு வருத்தம் கூடாமல் இருந்திருக்கும்

சரி

 நனைந்த லுங்கியை
மாற்றிக்கொள்ள

இனி

அழுக்கு மூட்டையைத் தான்

திறக்க வேண்டும்

No comments:

Post a Comment