Thursday, January 24, 2013


கால காலமாய்
உடையாத விளக்கை ஏற்றித் திரியும்
கனல் உயிர் வேகாத போதத்தில்
உருவம் குலையாது காணும்
மறைவிடங்களில்
ஒரே ஒர மென் சிரிப்பு உதிர்த்திருக்கிறது
கடல் அல்ல
சிற்றோடை
சில மரங்கள் பச்சையங்களை தெளித்திருப்பது
ஆழ்ந்த ரகசியம்
ஒரு சிற்றொடையென்றால்
குழப்பமும் தெளிவும் தானே
புகையிட்டு நகர்த்த முடியும் என
அந்த ரகச் சாத்தியங்களெல்லாம்
செல்லாத சூத்திரத்தில் அலசுங்கள்
மாயையேதான்
பாலாடை மனம்பரப்பும் இடங்களில்
விலகஇயலாத கட்டுகள் தெரிகிறதா
தடையென்பது கடுமையானது தானல்ல
வாசம் போன்ற காற்றில் கலந்த
மாய ரகம் தானென
முடிவுகளுக்குள் உறுதியிட்ட
பயணிக்கும் விசை
சுற்றதான் இடறுமோ இடறாதோ
பொடி கணத்திலேனும்
தெளிவென்பது வேகத்திலல்ல
காணும் காட்சிகளிலல்ல
நுகர்தல்கள் தாம்
அதாவது
அப்படித்தான் சொல்லவரும் ஞானம்
புலிகளா ஓடிக்கொண்டிருக்கிறது வரிகளில்
சிறு மண்ணாங் கட்டியும் இல்லை
இங்கு வேசங்கட்டிக் கொண்டாலும்
பொய்யுலகம் வெரு மான் கோ க்கள் தான்
தெளிந்த புள்ளிகளில் முளைக்கும் இடம்
நந்தவனங்களே அல்ல
யாருடைய வனம்
யாருடைய புல்கள்
வயதுகளின் வாடகைகளைக் கணக்கிட்டு
விளையாண்டு முடிக்கும் காலத்தில்
கரைந்து போய்விடும் நிலை
தெற்கத்திக் காற்றின் அந்தரத்தில்
என்றேனும் கண்டிருக்கும்
வெள்ளைப் பஞ்சென்ற பறத்தல்களில்
திசையெல்லாம்  இல்லை
திசைகளாய் இருக்குமோ
பொது வென்பது பொதுவில் தானென்பதை
பொதுவாகவே பொதுவென்கிறேன்
இலைகூட அல்ல
துளியாய் இறங்கிக் கொண்டிருந்தாலும்
சருக்கல்களில் விழுவதோ விழுக்காட்டுவதொ அல்ல
ஆழத்தைஅல்லவோ
மீட்டுக் கொள்வதற்க்கான பொறி








 

No comments:

Post a Comment