Saturday, January 19, 2013

பட்டயங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன

பட்டயங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன


சிறு கரைகளை
அழிக்க வேண்டிய செயலம்மா

யாம்
ஆற்றவிளைந்தது

சிறு  பயிரும்
வாடிவிடக் கூடாதென்ற
கருணையே தான்

இவ்வளவு தொலைவை அடைந்திருப்பது

சரி
அதுவும் ஒரு
வியாதியோ
என்னவோ

எதுவாயினும்

நீ
சொல்லெடுத்து வரும் வீதிகளில்
எவ்வித இடையூறும் இல்லை

கொஞ்சம்
மெலிதான சலங்கை இசைகளும்
புகை போல் எழும்பும்

சில பூக்களின் வாசணைகளும் மட்டுமே
அவ்வப்பொழுது கமழ்ந்துவரும்

இந்தப் பாதையில்

கபடமற்றுக்கிடக்கும்
யாசகன் நான்

 நீ எறிந்துவிட்டுப் போன

2 பட்டயங்கள் மட்டுமே
மின்னிக் கொண்டிருக்கும்

இந்தப் பாத்திரத்தில்

நானாகவேதான் நிறைந்திருக்கிறேன்

No comments:

Post a Comment