பட்டயங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன
சிறு கரைகளை
அழிக்க வேண்டிய செயலம்மா
யாம்
ஆற்றவிளைந்தது
சிறு பயிரும்
வாடிவிடக் கூடாதென்ற
கருணையே தான்
இவ்வளவு தொலைவை அடைந்திருப்பது
சரி
அதுவும் ஒரு
வியாதியோ
என்னவோ
எதுவாயினும்
நீ
சொல்லெடுத்து வரும் வீதிகளில்
எவ்வித இடையூறும் இல்லை
கொஞ்சம்
மெலிதான சலங்கை இசைகளும்
புகை போல் எழும்பும்
சில பூக்களின் வாசணைகளும் மட்டுமே
அவ்வப்பொழுது கமழ்ந்துவரும்
இந்தப் பாதையில்
கபடமற்றுக்கிடக்கும்
யாசகன் நான்
நீ எறிந்துவிட்டுப் போன
2 பட்டயங்கள் மட்டுமே
மின்னிக் கொண்டிருக்கும்
இந்தப் பாத்திரத்தில்
நானாகவேதான் நிறைந்திருக்கிறேன்
சிறு கரைகளை
அழிக்க வேண்டிய செயலம்மா
யாம்
ஆற்றவிளைந்தது
சிறு பயிரும்
வாடிவிடக் கூடாதென்ற
கருணையே தான்
இவ்வளவு தொலைவை அடைந்திருப்பது
சரி
அதுவும் ஒரு
வியாதியோ
என்னவோ
எதுவாயினும்
நீ
சொல்லெடுத்து வரும் வீதிகளில்
எவ்வித இடையூறும் இல்லை
கொஞ்சம்
மெலிதான சலங்கை இசைகளும்
புகை போல் எழும்பும்
சில பூக்களின் வாசணைகளும் மட்டுமே
அவ்வப்பொழுது கமழ்ந்துவரும்
இந்தப் பாதையில்
கபடமற்றுக்கிடக்கும்
யாசகன் நான்
நீ எறிந்துவிட்டுப் போன
2 பட்டயங்கள் மட்டுமே
மின்னிக் கொண்டிருக்கும்
இந்தப் பாத்திரத்தில்
நானாகவேதான் நிறைந்திருக்கிறேன்
No comments:
Post a Comment