Tuesday, December 9, 2014

கறுப்பும் சிவப்பும்
நிறைந்திருக்கும் அடையாளங்கள்
கரைந்து கொண்டிருப்பதை
யாருமே அறியவில்லையே
இப்பொழுதை சொக்கி கழிப்பவர்கள்
அப்பொழுது துடிப்பதை
இப்பொழுது காண்கிறேனே
பின்பொழுதை
முன் சொன்னால்
சங்கடம் இங்கல்லவோ
வேக்காடாய்
திரிந்து கொள்ளும்
சந்தர்பங்களில்
ஏன்
இங்கு மட்டும்
கறுப்பும் சிவப்பும்

No comments:

Post a Comment