Tuesday, December 9, 2014

புன்னகைக்குள் பொதிந்து அசையும்
வர்ணங்களை புரிந்து கொள்ள இயலாதா
துளி அசைவில்
இலைகளின் படபடப்பை உணர்வதில்லையா

பொன்னந்திஅறியாததா
அந்த உடலின் வால் அங்கிருப்பதை
உயரமே ஆகினும்
வலிஒன்று தானே
பக்கங்களில் பூரித்துக் கொள்வது
பக்குவத்தையல்லவா
அடையாளப் படுத்துகிறது
தயவு கூர்நது
சரிப்படுத்திக் கொள்
உன்னதமே

No comments:

Post a Comment