Tuesday, April 29, 2014

வானம் தேக்கி வைத்திருக்கும் மெளனத்தை
இந்த மேசையின் மேல்
சிந்தியிருப்பதாக
குறிப்பில் இருக்கிறது

எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி
அதன் வழியே விட்டு
கலைத்த உடலை
சாய்க்க

ஓய்விலிருக்கும் கண்களுக்குள்
ஓரிரு குறிப்புகள்
ஒட்டிக்கிடக்கிறது

எநத பரபரப்புமில்லாது
வாசித்து முடித்ததும்
தானாகவே அழிந்து விட
அமைதியாகவே தலைசாய்ந்தேன்

சில கணங்கள் முடிந்து
விழித்த பொழுது

மேலும்
ஒரு குறிப்பில்

இந்த சாந்தம் தான்
உனக்கிருக்கும் கொடை

இந்த இறுக்கம் தான்
காலமெல்லாம் நான் உனக்களித்திருக்கும்
ரகசியமும் என

வானிலிருந்து நேரிடையாக
விழுந்த குறிப்பில் காணப்பட்டது

எழுந்து படுக்கைக்குச் சென்றேன்

No comments:

Post a Comment