Tuesday, April 29, 2014

கோடுகளை வரைபவர்கள்

கோடுகளை வரைபவர்கள்
முதலும் கடைசியுமாய்
சிறிதும் பெரிதுமாய்
வர்ணங்களை இட்டுக் கொள்கிறார்கள்

ஆசைகளென்பதை
நிரந்தரமாக்கவா இயலும்

கதவுகளாலான உலகத்தை
செய்ய முயலும் பாவியர்களின்
கற்பனைகள்

தொலைவில் அநாதரவுகளாக
திரிந்து பறக்கிறது

கதவுகளாலா?
தடை செய்து விட முடியும்.
எதையும்.

இங்கு
கதவுகளென்பது
வறையறைகளின் குறியீடு
அவ்வளவே

No comments:

Post a Comment