Tuesday, April 29, 2014

பொது வெளி

காற்றே
மறைந்து போனவழிஎங்கு

இல்லாது போன
இழப்பை

ஏக்க மூச்சுகளால்
அடையாளப்படுத்திக்கொள்ளும்
நிசப்த வெளியில்

தவத்தைப் போல
அசையாது
நிலைத்து விட்ட
அப்பெருமரத்து இலைகளின்

ஆகப் பெரும் ரகசியம்
எதுவாயினும்

அதன் பிம்பம் படிந்த
நடைக் கால்களினிடையே

நிழலைப் போலவும்
பாதை நிறைந்து கிடக்கிறது

No comments:

Post a Comment