சுதந்திர பிரியத்தை அள்ளித் தரும் கவிதைகள்
(ப.தியாகு-வின், “எலிக் குஞ்சுகளோடு எனக்குக்
குரோதமில்லை” கவிதைத் தொகுப்பின் வசீகரத்தில்)
-- பொன்இளவேனில்
ஒரு கை நீரள்ளி
மேல் தெளிக்கிறாள்
துணுக்குற்றது போல
கொஞ்சமே அசைந்து கொடுக்கிறது
இன்னும்
உயிரிருக்கும் ஒரு மீன்
அதைத்தான்
தேர்ந்தெடுக்க வேண்டும் நாம் (பக்கம்-61)
ஒரு நிதர்சனமான ஒளியைத் தொலைத்து
விட்டதன் இருப்போடும் ஏக்கத்தோடும் அதன் அறிகுறிகள் தென்படும் திசைகளை நோக்கி ஒரு
பைத்தியத்தின் வெறியோடு காலமெல்லாம் கவிஞன்னென்பவன் தேடிக் கொண்டே இருக்கிறான்.
அதன் ஊமைக் குரல்கள் காலமெல்லாம அவனை அழைத்துக் கொண்டே செல்லும் உணர்வு போலவும்
இருக்கத்தான் செய்கிறது. இடையில் எந்த ஆறுதல்களும் எநத திருப்திகளுக்கும் ஆற்றுப்
படாத கவிமனம். படாத பாடுபடும். அவனை குறைந்து விடாத ஆகுருதியோடு பயணிக்கவும்
செயல்படவும் வைக்கிறது.
அவன் தொலைத்திருக்கும் ஒளியென்பது
ஒளிவடிவமாகவோ? கடவுள் வடிவமாகவோ? சிறு பறவை வடிவமாகவோ? ஏதோவது ஒரு உருவமாகவும்
மாறியிருக்கக் கூடும். அல்லது மாறிவிடவும் கூடும் .ஆனால் அவன் என்றென்றும் தன்
நிலையிலிருந்து அதனை அடைந்துவிடக் கூடிய பயணத்தை அல்லது நெருங்கி விடக்கூடிய
உத்வேகத்தை குறையாது தொடர்ந்து
கொண்டிருக்கும் நிலையில் தான் ஒரு கவிஞனாக தீராத கவிதைகளின் மூலம் அவனுக்கான
உலகத்தை அமைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறான். கவிஞன் புற உலகத்தால்
ஆமோதிக்கப் படுவதிலை காரண காரியங்களுக்குள் லாப நஷ்ட விதிகளுக்குள் சிறைபடுத்திக்
கொள்ள எத்தனிக்காதவன். அவனுக்கு ஒப்பனைகளாலான தீனிகள் செல்லுபடியாகாது.
சொற்களின் கூட்டிலிருந்து
வெளியுறும் பதட்டத்தின் எந்த
தடயங்களையும் இந்தக் கவிதைப் பரப்புகளில் படிந்திருக்கவில்லை, ஒரு நீண்ட இருப்பின் கிளைகளிலிருந்து பச்சை பிடித்திருக்கும்
காட்சிப் பின்னலை ஏதேட்சையாக அமைத்திருக்கிறது தியாகுவின் கவிதைகளுக்கான கலன்கள்.
எந்த கவ்வுதலுக்கும் முன்னான பதபதைப்புகளை செரித்து நிகழ்தலில்
இறையாகிப் உருப்பெரும் ஆசுவாசத்தின் மீண்ட நிசப்த்தத்தை சொற்களுக்குப் பின்னால் வழியவிடும்
நுடபவியுகத்தை விரிவுப்படுத்தும் யுக்தியை கையாளும் விதம் தான் கவிஞனின் தனித்
தன்மையென புலனாகிறது. இந்த தொகுப்பில் தெளிந்திருக்கும்
கவிதைகள். இம்மாதிரியான வட்டிவ நிலைகளிலேயே பயணித்திருக்கிறது.
தன் முழுமைகைகு பின்னான ஒளிக் கோடுகள் பல தோரணைகளைக்
கொண்டிருக்கின்றன பல விதமான வாசனைகளை ஏந்தியுள்ள இந்த வடிவ தோற்றங்கள்
பரவலாக்கப்பட்ட ஆழங்களின் வசப்படுத்தப்பட்டிருக்கும் தருணங்களைக்
கண்டுணர்ந்திருக்கின்றன. ஒருபோதும் இவைகள் அதன் பிறப்பின் சூழல்களுக்கான
பிரியங்களையே தழுவும் குரல்களையே ஒப்பிட்டபடி நகர்ந்து செல்லவுமான இயக்க விசைகளை
சுருக்கிக் கொள்ளவுமில்லை
“இந்தக் கவிதையை“
மூடியே
கிடக்கும்
கைவிடப்பட்ட
வீட்டின்
ஜன்னல்
கண்ணாடி யுடைத்து
கம்பியில்
பட்டு
மீள்கிற தொரு பந்து
கதிர்
பாதம் வைத்து
சூரியன்
உட்
பிரவேசித்த்தும்
இந்தக்
கவிதையை
நீங்கள் அழித்துவிடலாம். (பக்கம்-29)
தெளிவால் கோர்க்கப் பட்டிருக்கும் அற்புதமான கணங்களால்
இக் கவிதை பூரணமாகியிருக்கிறது. வலியின் இறுக்கங்களுக்கு கருணையால் நிரப்பப்படும்
சுதந்திர பிரியத்தை அள்ளித் தரவியலும்
முனைப்பில் கவிஞன் சூழலோடு நிறைந்திருந்த தருணம் அழகாகவே
வாய்த்திருக்கிறது.. கவிஞனின் பட்டயம் என்றாகவும் முன்னிற்கத்தான் செய்கிறது.
பயணத்தை எந்தவொரு திசையையும் பற்றிக் கொள்ளாதிருத்தல்
அல்லது தீர்மானிக்கவியலாத அல்லது தனி விருப்ப வெறுப்பமே இல்லாத நடைமுறையில்
பயணிப்பது அல்லது பயணத்தை தொடங்குவது என்பதான இடத்திலிருந்து நகரும் மையப்
புள்ளியிலிருந்து படிந்திருக்கும் கவிதைகள் புர்த்திபெறுகிறது. என்னைப்
பொறுத்தவரையில் கவிதைக்கான மனம் பார்த்தீனியா செடிகளுக்கும் ந்நதியாவட்ட
பூக்களுக்கும் ரோசா செடிகளுக்கும் அருகம்
புல் கூட்டத்திற்குள்ளும் நகரம் பயண அனுபவத்தை கவிஞனெனபவன் கடந்து
செல்லவேண்டியவானாக இருப்பதாலாயே பார்த்தீனியா பூக்கள் தெறித்த கண்களின்
உருத்துதலோடு மீதியைப் பார்க்கும் சிறு நடுக்கமே கூட கவிதைகளாக வேண்டிய
அவசியமாகவும் ஆகிறது என்பேன்.
“ஸ்நேகம்“
தினம்
ஒருபிடி தானியம் எடுத்து
வாசலில்
இறைப்பேன்
வானத்திலிருந்து
இறங்கி வந்து
கொத்தித்தின்று
பசியாறி
பறந்து போகும் குருவிகள்
தினம்
வாசலில் வந்து இறையும்
ஒருபிடி
தானியம் போலும்
என்
மனத்தின்
முல்லைமொக்கையொத்த
மென்
அலகால்
வலிக்காமல்
தம்மை
கொத்தித்
தின்னவிட்டு
ரசனையின்
பசியாற்றி
பறந்து போகும் குருவிகள் (பக்கம்-43)
ஒரு வெட்டுக் கிளியின் துள்ளலும், ஒரு தும்பியின்
பறத்தலும், படபடக்கும் ஒருசிட்டுக் குருவியின் பரவசமும். கவிஞனுக்கு
ஒன்றுதானென்றாலும் அதன் குணாம்சத்தை அவனுடைய கவிதைகள் பிரதிபலிக்கவேண்டும்.
தியாகுவின் கவிதைகளில் பிரதிபலித்திருப்பதை உணரவும் முடிகிறது.
பொதுவாக எனக்கான வேலைப்பளுக்களோடு
இயந்திரத்தனமான
வேகத்திற்கிடையில் என் முன்னால் உயர்ந்து நிற்க்கும் அல்லது
நெருங்க நெருங்க தொலைவாகிக் கொண்டேயிருக்கும். இடைவெளியை பூர்த்தி செய்வதற்கான
ஓட்டநிலைகளில். நண்பர். தியாகுவோடு கவிதைகளுக்கான தரிசன நெருக்கங்கள் பற்றி
நேரிடையான, அதிகப்படியான, பரிமாறுதல்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள்.
அமைந்திருக்கவில்லை. எங்களின் சந்திப்புகள் அவசரகால, பதற்றகால நிலைகளிலேயே
பெரும்பாலும் சாத்தியமாகியிருக்கிறது.
முழுக்க முழுக்க இலக்கிய உணர்ச்சி
வயமான ஓட்டங்களை அல்லது ஓட்டங்களுக்கான விதிகளை விரும்பி ஏற்றுக் கொண்ட சூழலோ?
தண்டனையோ? எதுவானாலும் ஓடுவது தான். நிர்பந்தமாகவும் அதுவே இயல்பானதாகவும் என்
வாழ்வியலோடு இணைந்திருப்பதை கடந்த கால சாட்சியங்கள். ஆறுதலாக முன்
நிற்கிறது.என்பதில் ஓரளவேனும் மனம் நிம்மதிகொள்கிறது.
தியாகுவுடனான முதல் சந்திப்பை
நினைவுபடுத்திப் பார்க்கிறேன். சுமார அய்ந்து அல்லது ஆறுவருடங்களுக்கு
முன்னால் யாழி என் வீட்டிற்கு அழைத்து
வந்த அறிமுகப்படுத்திய கவிஞர்களில் தியாகும் ஒருவர். அன்று தான் அதிகப்படியான
நேரம் அவரோடு கவிதைகளைப் பற்றியான உரையாடல் சாத்தியமாகியிருந்தது. இந்த பெரும்
இடைவெளியின் தாக்கம் மற்றும் அவருடனான தொகுப்பும் அதற்க்கான பதிவுகளை எழுதிக்
கொண்டிருக்கும் இந்தநெகிழ்வான தருணமும். என்னை முழுதும் நிறைவடையச்
செய்திருக்கிறது. என்பதில் மகிழ்சியே..
ஆசிரியர்- ப. தியாகு
வெளியீடு -
வெயில்நதி
எண்-1-டி சந்தைமேடு,
சிறுகடம்பூர்,
செஞ்சி- 604202
பக்கம்- 80
விலை- ரூ. 70
No comments:
Post a Comment