Monday, August 5, 2013

 ஞாபகங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்   கழுத்து மணிகள்
(-இளஞ்சேரலின் –“தம்பான் தோது“ சிறுகதை குறித்து எனதுபார்வை)

“தம்பான் தோது“ சிறுகதையை இளஞ்சேரல் என்னிடம் வாசிக்க தந்த அந்த நேரம் அவரோடு சேர்த்து இரவும் குவிந்திருந்தது. நான் வேலையை முடித்து சக்கையாக திரும்பிய இரட்டைபுளியாமரம்  அண்ணாச்சி கடையில் வாசலில் ஒரு கோல்டு ஃபில்டரில் தொடங்கி முன்று கோல்டு .பில்டர் நான்கு பொட்டுக் கடலைப் பருப்பிகளோடு முடிவடையும்போது. சில சம்பவங்கள்-இலக்கிய உரையாடல்கள்-பயணிக்க வேண்டிய எல்லைகள்-அதன் வரையரைகள் என தொடர்ச்சியான உற்சாகச் சோர்வில் மனம் தனிமைப் பட்டிருந்தது.
வழக்கமாக இருவரின உரையாடலகளின் முடிவில் எப்பொழுதுமே விரும்பும் எல்லைகள் என்பது எங்கோ வெகு தொலைவில்உணரும் புள்ளிகளாகவே உணரும் தருணங்கள் தான் எஞ்சியிருக்கின்றன.
இதனுள் தருக்கங்கள்-விவரிப்புகள்-இழப்புகள்-யோசனைகளென விரிந்துசுருங்கும் நாட்களைப் போல வழக்கமாக தொடரும் சந்திப்புகள் தானென்றாலும்  “தம்பான் தோது“ என்கிற படைப்பின் ஆதர்சனங்களில் ஊடாடுகிற வாய்ப்பு என்பது தான் குறிப்பிடுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.
இக் கதையில் முக்கியமான “தம்பான்“ முருகன்“ என்ற இரு கதா பாத்திரங்களின் பிம்பம் சம வயதை ஒத்திருப்பதாகிறது என்பது தான். இதுகூட மிகவும் நெருக்கமான விசயமாக்கூட அமைந்திருக்கலாம் என்பதும் என்னுள் மிஞ்சிய பதிலாக எடுத்துக் கொண்டேன்.
அதனால் தானோ என்னவோ கதாபாத்திரங்களின் உரையாடல்கள் .மற்றும் வாழ்வியல் சித்திரங்கள் எல்லாம் பார்த்திருக்கிற பழக்கப் பட்ட காட்சிகளாக  ஞாபகங்களாக மனதிற்குள் நிழலாடு கின்றன.
பொதுவாக கதைக்களத்தில் உலவும் ஏதாவது ஒருகதாபாத்திரங்களின்வழியாக ஒரு காலத்தை உணர்வுகளை விடைகளை மீட்டுக்கொண்டுவரும் வலிமை என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. அப்பாத்திரங்கள் பேசப்படுகிற உணர்வுகள் வாசகன் மனதில்உலவிச் செல்லும் அழுத்தங்களில் தான் புதிய புதிய வழித்தடங்களை உருவாக்குகின்றன.அல்லது அதற்கு காரணமாகவும் அமைகின்றன இந்தஊடுருவல்களுக்கானவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாரம்சம் தான்   மிகச் சிறந்த ஒரு  சிறுகதையின் உயிரோட்டமாக இருக்க முடியும். இந்த அழுந்துதல்களின் வினையே .இந்த பதிவுகள்.
மனம் நிறைத்திருக்கும் மௌனங்களை எழுத்தாக்கும் முயற்சியில் ஓரளவேனும் நிறைவுறும் தருவாயில் தான் தமக்கான இறுக்கத்தை கொஞ்சமாவது இறக்கி வைக்க இயலும் என்கிற முயற்சி தான் காரணமாகவுமாகிறது.

கிட்டத்தட்ட எழுபத்தைந்து அல்லது எண்பதுகளின் நிறைநத மனிதர்கள் சொந்த ஊரின் மண்வாசம் கரும்புக் காடுகள் மக்காச் சோளக் காடுகள் மசால் காடுகள் விளைந்த இருகூரின் நிலபரப்புகள் மேலும் மிக முக்க்கியப் பகுதியான சந்தை அங்கு கூடும் விவசாயிகள் விறபனையாளர்கள் இடைத் தரகர்கள் காய்கரிகள் மற்றும் வெளி ஊரிலிருந்து இரவோடு இரவாக வரும் மாட்டு வண்டிகள் பயணிக்கும் மாடுகளின்  கழுத்து மணி ஓசைகள் என அத்தனை திசைகளும் உயிர்த்துக் கொண்டிருந்த ஊரின் முந்தைய பக்கங்களில்  விளையாடிய மைதானங்கள்  ஏரோப்பிளேன் காடுஎன பெயர் பெற்ற பசுமை மற்றும் செம்மண் வரப்புகள் நிறைந்த அன்றைய கால நில இயக்கங்களில் தோய்ந்த எனது சிறு பருவம்  பழைய நண்பர்கள் அவரவர்களின் மொழி யென ஊர் பேசும் அனைத்து உணர்வுகளும் விரிந்த காலமறைப்பிற்குள் புதையுண்டு போன சிலபெறும் ஆத்ம நிஜங்களை அதன் பசுமைகளை மகிழ்வுகளை எதார்த்தங்களை இயற்கைகளை வாழ்வியல் உணர்வுகளில் தவிக்கவிட்டு  அனுபவங்களாலான நுட்பங்களை கதை வழியாக தெளித்திருப்பது இளஞ்சேரலின் உளப்புர்வமான சக்தியாக நிறைந்திருக்கிறது என்பது ஊர்சிதமாகிறது.
கதையில் மிக எளிதாக இளஞ்சேரல் குறிப்பிட்டுச் செல்லும் இரயில் தண்டவாளங்களில் பயணிப்பது பற்றியான குறிப்புகள் அற்புதமானது.  இரயில் தண்டவாளங்களில் நடந்து விளையாடாதவர்கள் என யாருமே இருக்க முடியாது  என்றே கூட சொல்ல்லாம்.
அதே போல “பிறவிச் சாபம்“ என்கிற சாதிய பிளவுகளை அதன் சுயம் சார்ந்த மறைமுகங்களை அல்லது உணர்வுகளையும் கூட
“அவனுக்கொன்று என்றால் ஊர் தன் குடும்பத்தாரை அழித்துவிடுவார்கள் என்பதையும் அவன் அறிந்தேயிருந்தான்“
தொலைந்து போன நண்பனைத்தேடும் நோக்கில் மனதில் தோன்றும் எண.ணமாக வடித்திருக்கும் ஒரு வரியில் சாதியத்தின் ஆழ விசத்தை குறித்த நுட்பங்களை போகிற போக்கில் சொல்லிப் போவது கதையாசிரியனின் பலமான கூர்மையை காட்டுகிறது.

மீண்டும் மீண்டும்  இயற்கைசார்ந்த பந்தங்களை நாம் குறிப்பிடுவதற்க்கான நோக்கம் என்கிற வகையில் சொல்ல விளைவது என்னவென்றால்  இன்றைய சூழலில் நமது கால்களுக்கு கீழிருந்து நம்மை நாமே உன்னிப்பாக கவனிக்கத் துவங்க வேண்டிய அவசிய நிலைமைக்கு கட்டாயமாக்கவேண்டியிருக்கிறது.


உழைப்பின் வாசனைகள் மொழிகள் விளையும் தானியங்களில் மணக்கும் நிலங்கள் அவை சார்ந்த தொழில்கள் சந்தைகள் விற்பனையகங்கள் வாக்கு சுத்தம் என்பதைப்போலான நிதர்சனங்கள் விளையும் அப்பட்டமான புதை சொற்களை உயிர் பெற்ற காலம் என பதின் பருவ காலங்களைச் சொல்லலாம் .

அன்றைய மண்சார்ந்த மனிதர்களை நொய்யலாற்றின் ஈரத்தோடு சிறு பருவ வாழ்க்கையை சுவைத்த காலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதைப் போல இன்றைய நிகழ்கால சூழல் பெரும் வசந்தத்தை இழந்திருக்கின்றன.

இன்று பல தரப்பட்ட மனிதர்கள் வெவ்வேறான மொழிகள் வெளி மாநில மனிதர்களால் பிறந்த ஊர் நிரம்பிக் கிடக்கின்றன. சொந்த ஊர்காரர்கள் யார்? யாரென முகம் மறந்து போன நிலையில் த்த்தமது உலகத்தை எதிரெதிரே கடந்து கொண்டிருக்கும் தற்போதைய நேரத்தில்.
முழுக்க முழுக்க பெரு நகர சொகுசிற்குள் பழக்கப் பட்டுவிட்ட உடம்பு. பருத்திகளும் பஞ்சாலைகளும் அழிந்து கணிணியும்- அலைபேசியும்- எரி பொருளுமாய் திரியும் இயந்திர வாழ்க்கைக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டுவிட்டது கட்டாயமாகிப் போனது.
இன்றும் எனது ஊர் பெருநகரத்திற்கான வசதிகளாக மேலும் திடப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதனின் சாட்சிகளாக இரண்டு பெரும் ராட்ஜச பாலங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் 80 சதவிகித வேலைகள் முடிவடைந்துவிட்டன. உயிர் பெற்றுக் காண்டிருக்கும் இந்த பாலத்திற்காக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இரட்டைப் புளிய மரங்களை உயிரோடு சாய்த்துவிட்டு அதன் வாழ்விடத்தின் மீது தான் புதிய பாலம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படி ஊரின் குறிப்பிடக்கூடிய நினைவுச் சின்னங்கள் இழந்த நிலையில்
பெட்ரோல் டீசல் வாடையிலும் போக்குவரத்து நெரிசல்களிலும் இழந்து போன சிறுவர்களாக விளையாடிய மைதானங்களின் சக நண்பர்களை படிமமாகிப்போன அந்த மென்மைகளை தேடிக் கொண்டிருக்கும் பரிதாப வாழ்க்கைக்குள் தள்ளபட்டிருக்கிறோம் எனபது தான் பேருண்மை.
மேலும் மகிழ்ந்த பருவங்களின் சாட்சிகளாக உடனிருந்த பாச்சான் மரங்கள்-கொட்டமுத்துச் செடிகள்-போன்ற அடையாளங்களும் இன்று அழிந்து போங்விட்டன. இந்த மரங்களின் மீதான அக்கறைகள் எத்தனை மனங்களுக்குள் அழுந்திக் கொண்டிருக்கும் என்றால். வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
நொய்யல் பரிமளித்திருந்த காலத்தைப்போலவே எல்லா ஞாபங்களும் அடையாளமில்லாமல் சாட்சிகளில்லாமல் மாறிப் போயிருக்கின்றன.
இப்படி எதார்த்த வகையிலான.நடைமுறை மனிதர்களாகவே வாழ்கிற வாழ்ந்த “தம்பான்“ “ முருகன்“போன்ற உருவ வழியாக பின் பதின் பருவ நட்புகளை அதன் ஞாபகங்களை பின் சங்கிலியாக இழுத்துச்செல்லும் பலம்.“தம்பான் தோது“ சிறுகதையில் சாத்தியமாகியிருக்கிறது.
இந்தியமரபு அல்லது இந்திய மொழிகளுக்கு இணையாக தமிழ் சிறுகதை பரப்பில் அடித்தட்டு மக்களின் வாழ்வு நிலைகளை பிரதிபலிக்கிற பின் நவீன தள வகை கதைகளாக இளஞ்சேரலின்  “அம்பாரைப் பள்ளம்“ “சக்திவேல் முருகன் காவடிப்பண்டு“ “கிழக்கு மோனம்“போன்ற கதைகளை குறிப்பிட முடியும்.
 தாத்தாவும் பேரனுமாய்வேறுபடும் காலத்தை தலைமுறை இடைவெளிகளை தமது குலத்தொழிலான  எலி வேட்டைக்கு செல்லும் அனுபவங்ளை வித்தைகளை கற்றுக் கொடுப்பதும் உரையாடல் வழி பேரன் வேறுபடுவதும் பின்பு மோதிக்கொள்வதுமாய் தொடரந்துகொண்டிருக்கும் காட்சிகளுக்குள் பாலங்களின் வழியாக பிழைத்துக்கொண்டிருந்த பலங்குடிகளின் வாழ்வுநிலை அதன் காட்டுப்பகுதிகளின் அடர்த்தி நிறைந்த இடையுருகள் மற்றும் விலங்குளின் குரல்கள் என காட்சிகளாய்விரிந்து செல்லும் அற்புதம் “அம்பாரை பள்ளம்“சிறுகதையில் அவருக்கு சாத்தியமாகிருப்பதை குறிப்பிட்டுத்தானாக வேண்டும்.
அதே போல விளிம்பு நிலை சார்நத மனிதர்களின்வாழ்கையோடு கலந்திருக்கும் இசைக் கலைஞர்களின் சூழலைக்குறிக்கும் அவர்களின் த்த்தளிப்புகளை அவர்களின் கோபதாபங்களை வட்டார மொழிகளை பதிவுசெய்திருக்கும் “சக்தி வேல் முருகன் காவடிப் பண்டு“சிறுகதையையும்.
கிராமம் சார்ந்த பிண்ணனியில் விரியும் காலம்  மேலும் பாலியல்தொழிலாளியாக அலையும் பெண்ணின் ஆங்காரங்களை அவளின் கொடுர செயல்ளை வெறியோடு ஒரு ஆணோடு மோதி கொலையில் வெற்றியிடும் போர்ச்சூழலை தன் நடையின் இயல்பில் திகிலாய் அலைத்துச் செல்லும் “கிழக்கு மோனம்“ போன்ற அரியவகை சித்திரங்களாக அவரது கதைஉலகம் விரிவடைந்திருக்கிறது.
இப்படியான பல மாறுபட்ட புதிய வடிவங்களை கதைகளை தமிழச்சூழலுக்கு  நிறைவுதரும் வகையில் “தமபான் தோது“ மேலும்ஒரு இடநிறைவைத் தரும்.என்பது திண்ணம்..   .                








No comments:

Post a Comment